மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 January, 2021 8:49 AM IST
Credit : Daily Thandhi

மருத்துவ குணம் வாய்ந்த கருப்பு கவுனி நெல் சாகுபடி (Cultivation) செய்வது குறித்து பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் நேரடியாக களப்பயிற்சி (field training) பெற்றனர்.

மருத்துவ குணமுடைய கருப்பு கவுனி:

பழங்கால நெற்பயிர்களில் அதிக மருத்துவ குணம் கொண்டது கருப்பு கவுனி எனும் நெல்வகை. குறிப்பாக, நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, தைராய்டு, மன அழுத்தம், குழந்தையின்மை, எலும்பு தேய்மானம், இடுப்புமூட்டு வலி, இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், புற்றுநோய் (Cancer), கர்ப்பப்பை புற்று உள்ளிட்ட நோய்களுக்கு நல்ல நிவாரணியாக கருப்பு கவுனி அரிசி இருந்தது. நாளடைவில் இந்த நெல் வகையை பலர் மறந்து போனார்கள். சிலர் மட்டுமே அதன் மகத்துவத்தை உணர்ந்து பயிர் செய்து வருகின்றனர்.

களப்பயிற்சியில் மாணவர்கள்:

டெல்டா மாவட்டங்களில் ஒரு சிலர் மட்டுமே இதைப் பயிர் செய்து வருகின்றனர். அந்தவகையில், காரைக்கால் தலத்தெரு கிராமத்தில், இயற்கை விவசாயி இளங்கோ (Elango) என்பவர் இந்த கருப்பு கவுனி நெல்லை சாகுபடி செய்து, விற்று வருகிறார். இதை அறிந்த, காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 4-ம் ஆண்டு இளங்கலை வேளாண் பட்டப்படிப்பு (Bachelor of Agriculture degree) பயின்று வரும் 28 மாணவர்கள், கல்லூரி இணை பேராசிரியர் ஆனந்தகுமார் தலைமையில், தலத்தெரு சென்று நேரடி களப்பயிற்சி (Fiald Training) பெற்றனர்.

இயற்கை விவசாயிகளால் சாகுபடி

விவசாயி இளங்கோ மாணவர்கள் மத்தியில் பேசுகையில், 160 நாட்கள் வயது கொண்ட இந்த நெல்லை, ஆடிப்பட்டத்தில் பாய் நாற்றங்கால் முறையில் நட்டு, வேப்பம், கடலை புண்ணாக்கு, ஜீவாமிர்த கரைசல், மீன் அமிலம், ஐந்திலைக் கரைசல் பயன்படுத்தி, ஏக்கருக்கு 21 மூட்டைகள் அறுவடை (Harvest) செய்து, கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்து வருகிறேன் என்றார். இந்த நெல் காலப்போக்கில், இயற்கை விவசாயிகளால், மீட்டெடுக்கப்பட்டு தற்போது ஒரு சிலர் சாகுபடி (Cultivation) செய்து வருகின்றனர். நாமும் இதை பரிசோதிக்க முன்வர வேண்டும் என்று கூறினார்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

வேளாண் துறை சார்பில் கால்நடை முகாம்! கால்நடை வளர்ப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு

சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் மீன்களுக்கு ஏற்ற இயற்கைப் பை!

English Summary: Cultivation of medicinal black cowpea paddy! Students in field training!
Published on: 01 January 2021, 08:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now