பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 24 October, 2022 6:23 PM IST
Cultivation Of Tulsi

தேனி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் துளசி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் விசேஷ நாட்களில் துளசியின் விலை எகிரும் என்ற எதிர்பார்ப்பில் துளசி விவசாயிகள் அறுவடைக்கு காத்திருக்கின்றனர். தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் சில குறிப்பிட்ட ஏக்கர் பரப்பளவில் துளசி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் பயிரிட்டு செப்டம்பர் மாதத்தில் அறுவடைக்கு தயாராகும் வகையில் கூடலூர் பகுதி விவசாயிகள் துளசி சாகுபடி செய்துள்ளனர்.

துளசி மருத்துவ பயன்பாடு மற்றும் கோயில் பூஜைகளுக்கு பயன்படுத்தக்கூடிய ஒன்றாக உள்ளது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் கோயில்களில் நடைபெறும் பூஜைக்கு பயன்படுத்தவும் நெருங்கி வரும் ஆயுத பூஜை திருவிழாவை முன்னிட்டும் கூடலூர் பகுதியில் விளைந்துள்ள துளசியை அறுவடை செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

தினசரி வருவாய் தரக்கூடிய பயிராக துளசி இருந்தாலும் புரட்டாசி மாதத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் துளசி பயன்பாடு சற்று அதிகமாக இருக்கும் என்பதால் புரட்டாசி மாதத்தின் போது அறுவடைக்கு தயாராகும் வகையில் துளசி சாகுபடி செய்வதாக கூடலூர் பகுதி விவசாயிகள் கூறி வருகின்றனர்.

பராமரிப்பு மற்றும் பாசன முறை எளிது என்பதால் கூடலூர் பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் துளசி சாகுபடியை மேற்கொண்டுள்ளனர் . தற்போது கிலோ 30 ரூபாய்க்கு வெளிச்சந்தையில் விற்கப்படும் நிலையில் புரட்டாசி விசேஷ நாட்களில் கிலோ 50 ரூபாய்க்கு துளசி விற்பனையானால் துளசி விவசாயிகளுக்கு கட்டுப்படி ஆகும் என்கின்றனர் விவசாயிகள்.

மேலும் படிக்க:

PMSYM Yojana: விவசாயிகள் ரூ.36000 பெற முடியும்

வீட்டில் இருந்தே மாதம் ரூ. 20- 25,000 வரை சம்பாதிக்கலாம்

English Summary: Cultivation of Tulsi can earn lakhs of income
Published on: 24 October 2022, 06:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now