மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 September, 2020 7:26 AM IST

நடப்பு ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை சராசரி அளவை ஒட்டியே இருக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2020ம் ஆண்டின் வடகிழக்குப் பருவமழைக் (North East Monsoon) காலத்திற்கான (அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள (TamilNadu Agricultural University) வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்ககத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு, நீரின் வெப்பநிலை, தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றின் அடிப்படையில், கணிணி கட்டமைப்பைக் கொண்டு 2020ம் ஆண்டிற்கான வடகிழக்குப் பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.

சராசரி மழை ( Expecting Average Rain)

இதன்படி அரியலூர், சென்னை, கோயமுத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, நாகபட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருதுநகரில் சராசரி மழை பெய்யக் கூடும்.

சராசரியை விட அதிகம் (Higher than Average)

மாவட்டங்கள் காஞ்சிபுரம், மதுரை, திருவாரூர், திருச்சி மற்றும் வேலூரில் சராசரியை விட அதிக மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் சராசரி மழையளவிற்கு ஒட்டிய மழையளவு எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயத்திற்கு சாதகம் (Advantage for agriculture)

ஆகஸ்ட் மற்றும் செம்டம்பர் மாதங்களில் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் சராசரி மழையளவைக் காட்டிலும், அதிக மழை பெறப்பட்டுள்ளதால், மண்ணில் போதுமான அளவு ஈரப்பதம் இருக்கும்.

இதனை பயன்படுத்தி விவசாயிகள் விதைப்பு செய்வதன் மூலம், பயிரின் முதன்மை நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். சராசரி வடகிழக்குப் பருவமழை எதிர்பார்க்கப்படுவதால், தற்போது விதைக்கும் பயிர்கள் நல்ல வளர்ச்சியும் மகசூலும் பெற முடியும்.

மேலும் படிக்க...

இயற்கை சாகுபடிக்கு ஊக்கத்தொகை- காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு!

தட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

English Summary: Current Northeast monsoon in Tamil Nadu will be average - TNAU forecast!
Published on: 24 September 2020, 07:25 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now