News

Saturday, 21 January 2023 07:31 PM , by: T. Vigneshwaran

Cow Breeding

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள உழவர் பயிற்சி மையத்தில் இலவச கறவை மாடு வளர்ப்பு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உழவர் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் விவசாயிகளுக்கும், வேளாண் கல்லூரியில் பயிலும் மாணவியருக்கும் இலவச கறவை மாடு வளர்ப்பு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு பயிற்சி மையத்தின் தலைவர் எஸ்.ஜெயசங்கர் தலைமை வகித்தார். பயிற்சி மைய உதவிப் பேராசிரியர் விஜயசாரதி முன்னிலை வகித்தார்.

பயிற்சி முகாமில் கறவை மாடுகளில் பால் கறக்கும் முறைகள் மற்றும் பராமரிப்பு முறைகள், கறவை மாடுகளின் வகைகள் மற்றும் சிறந்த கறவை மாடுகளை தேர்வு செய்தல், தீவனப் பராமரிப்பு முறைகள், நோய்த்தடுப்பு முறைகள் ஆகியன குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

மேலும் படிக்க:

உடலை வருத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

கரும்பு வாங்க ஆள் இல்லை - குமுறும் வியாபாரிகள்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)