மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 January, 2023 10:18 AM IST
Dangerous XBB.1.5 Virus

XXB.1.5 ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் நமது நாட்டிற்குள் நுழைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் குஜராத் மாநிலத்தில் முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட விஷயம் தீயாய் பரவி கொண்டிருக்கிறது. வெளிநாட்டு தொடர்பின் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ் (Corona Virus)

அடுத்த 40 நாட்கள் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். நான்காம் அலை உருவாக வாய்ப்பிருப்பதால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது.

அண்டை மாநிலமான மகாராஷ்டிராவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இம்மாநிலத்தில் XBB வைரஸ் பாதிப்பு 275 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் XBB.1.5 பாதிப்பு இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை பொறுத்தவரை வெளிநாடுகளில் இருந்து வருவோர் விமான நிலையங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

நோய் எதிர்ப்புச் சக்தி (Immunity)

அனைவரிடமும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். 30 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் வீரியத்துடன் இருக்கும். அதற்காக நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க

பொங்கல் பரிசில் ஏதேனும் பிரச்சனையா? புகார் தர இலவச எண்கள் வெளியீடு!

பொதுமக்கள் கவனத்திற்கு : ஜனவரி மாத வங்கி விடுமுறை நாட்கள் இதோ!

English Summary: Dangerous XBB.1.5 Virus Enters India: Precautionary Measures Intensified
Published on: 01 January 2023, 10:18 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now