நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 August, 2022 6:30 PM IST
Daughter Of Taxi Driver Who Is IPS Officer

சமீபத்தில் வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் இந்திய அளவில் 338 ஆவது ரேங்க் எடுத்து யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் தமிழகத்தை சேர்ந்த டாக்சி ஓட்டுநர் மகள் ஏஞ்சலின் ரெனிட்டாவுக்கு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வாழ்த்து தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஏஞ்சலின் ரெனிட்டா. இவரது தந்தை டாக்சி ஓட்டுநராக இருக்கிறார்.

பத்தாம் வகுப்பில் 490 மதிப்பெண்களும், பன்னிரெண்டாம் வகுப்பில் 1158 மதிப்பெண்களும் எடுத்த ஏஞ்சலின் ரெனிட்டா, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனத்தில் பொறியியல் படித்தார். கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போதே சிவில் சர்வீஸ் தேர்வில் கலந்து கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். 2020-ல் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி தேர்ச்சி பெறவில்லை.

இதை அடுத்து மேலும் தீவிரமாகப் படித்து, மறுபடியும் தேர்வெழுதினார். அதன் பலனாக சமீபத்தில் வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் இந்திய அளவில் 338 ஆவது ரேங்க் எடுத்து, யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார்.

தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள 27 பேரில் ஏஞ்சலின் ரெனிட்டாவும் ஒருவர். இந்த நிலையில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஏஞ்சலின் ரெனிட்டாவுக்கு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:

விரைவில் அறிமுகப்படுத்தப்படஉள்ள எலக்ட்ரிக் டிராக்டர்

கண்ணைக் கவரும் வண்ணத்துப்பூச்சி எப்படி உருவாகிறது?

English Summary: Daughter Of Taxi Driver Who Is IPS Officer- Tamil Nadu DGP Greetings
Published on: 09 August 2022, 06:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now