மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 May, 2023 1:59 PM IST
Deadly virus surpassing corona, world must prepare to face the next disaster, WHO chief warns!!

உலக சுகாதார அமைப்பின் வருடாந்திர கூட்டம் சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கலந்து கொண்டார். அப்போது அந்த கூட்டத்தில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர், கொரோனாவை மிஞ்சும் கொடிய நோய்க்கு உலகம் தயாராக வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது “ வேறொரு நோய்க்கிருமியின் அச்சுறுத்தல் இன்னும் ஆபத்தான ஆற்றலுடன் வெளிவருகிறது. இந்த நோயால், அதிகமானோர் உயிரிழக்கக்கூடும். உலக நாடுகள் இதை புறந்தள்ளிவிட முடியாது. அடுத்த உலகளாவிய நோய் வந்து கொண்டிருக்கிறது. எனவே அடுத்த தொற்றுநோயைத் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டிய நேரம் இது ", என்று தெரிவித்துள்ளார்.

ஒன்பது முதன்மை நோய்களை பொது சுகாதாரத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களாக உலக சுகாதார அமைப்பு அடையாளம் கண்டுள்ளது. மருத்துவ சிகிச்சையின் பற்றாக்குறை மற்றும் தொற்றுநோயாக பரவும் திறன் காரணமாக அவை மிகவும் ஆபத்தானவை என்று வரையறுக்கப்பட்டுள்ளது." என்று தெரிவித்தார்.

மேலும் அவர் “ கடந்த 3 ஆண்டுகளில் கோவிட் நம் உலகத்தையே தலைகீழாக மாற்றியது. உலகம் கோவிட் -19 தொற்றுநோய்க்கு தயாராக இல்லை, இது ஒரு நூற்றாண்டின் மிகக் கடுமையான சுகாதார நெருக்கடி. ஏறக்குறைய 7 மில்லியன் இறப்புகள் பதிவாகியுள்ளன, ஆனால் இறப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக உள்ளது - குறைந்தது 20 மில்லியன் பேர் இறந்திருக்கலாம். எனவே, செய்ய வேண்டிய மாற்றங்களை நாம் செய்யாவிட்டால், யார் செய்வார்கள்? இப்போது செய்யாவிட்டால், எப்போது?" என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் " இந்த சமூகத்தில் ஒரு தொற்று நோயை கட்டுப்படுத்த மக்களின் அர்ப்பணிப்பு மிகவும் முக்கியமானது, ஏனென்றால் இந்த தலைமுறை ஒரு சிறிய வைரஸ் எவ்வளவு மோசமானதாக இருக்கும் என்பதை அனுபவித்தது" என்று தெரிவித்தார்.

2019-ம் ஆண்டில் சீனாவின் உஹான் மாகாணத்தில் முதன்முதலில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டி படைத்தது. முதல் அலை, 2வது அலை, 3வது அலை என பரவிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மேலும் அவ்வப்போது டெல்டா, ஒமிக்ரான் போன்ற உருமாறிய கொரோனா வகைகளும் அச்சுறுத்தி வருகின்றன.

இந்த சூழலில் கொரோனா தொற்றுநோய் இனி சுகாதார அவசரநிலை அல்ல என்று உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

"நோய் மற்றும் மரணத்தின் புதிய எழுச்சிகளை ஏற்படுத்தும் மற்றொரு மாறுபாட்டின் அச்சுறுத்தல் உள்ளது" என்று டெட்ரோஸ் கூறினார். "மற்றொரு நோய்க்கிருமியின் அச்சுறுத்தல் இன்னும் ஆபத்தான ஆற்றலுடன் வெளிவருகிறது."என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

நாட்டிலேயே சிறந்த நகரம்! கோவைக்கு அடிச்சது ஜாக்பாட்!!

ஒகேனக்கல்லில் கேமராக்கள், எச்சரிக்கை பலகைகள்! விபத்துகளை தடுக்க புதிய நடவடிக்கை!!

English Summary: Deadly virus surpassing corona, world must prepare to face the next disaster, WHO chief warns!!
Published on: 25 May 2023, 01:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now