மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 May, 2021 10:11 PM IST

தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் தற்போது படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 33,361 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்ட சென்றது. கடந்த வாரத்தில் இதன் உச்சமாக நாள் ஒன்றுக்கு 36 ஆராயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். ஜூன் இறுதியில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த 10ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலிலிருந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது கொரோனா தொற்று படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில், 33,361 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 474 பேர் உயிரிழந்து உள்ளனர். 30,063 பேர் குணமடைந்து உள்ளனர்.

கொரோனா பாதிப்பு விவரம் 

தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 74,145 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 33,361 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,78,621 ஆக அதிகரித்து உள்ளது. 474 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22,289 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னையில் 2,779 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் கோவையில் 4,734 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

20 கோடி டோஸ் தடுப்பூசி

நாட்டில் இதுவரை வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து டோஸ்களின் எண்ணிக்கை 20.54 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. .
தடுப்பூசி வழங்கல் நடவடிக்கையின் மூன்றாவது கட்டம் தொடங்கியதிலிருந்து நாடு முழுவதும் உள்ள 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 1,51,52,040 பயனாளிகளுக்குத் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

இதில், தமிழ்நாட்டில் மட்டும் 18 முதல் 44 வயது வரை உள்ள மக்களில், 6,42,267 பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வசிக்கும் 18 முதல் 44 வயது வரை உள்ள மக்களில், 12,680 பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க....

கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் சிக்னல்!

English Summary: Declining corona infection in Tamil Nadu, 33,361 people confirmed infected in last 24 hours !!
Published on: 27 May 2021, 09:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now