மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 June, 2021 7:44 AM IST

தமிழகத்தில் 15,759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 378 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்து 21 நாட்களாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது அறுதல் தருகிறது.

கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது, அதன்படி தமிழகத்தில் நேற்று 1, 82,586 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் 8,769 ஆண்கள், 6,990 பெண்கள் என மொத்தம் 15 ஆயிரத்து 759 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,24,597 ஆக அதிகரித்து உள்ளது, இதுவரை 2 கோடியே 88 லட்சத்து 63 ஆயிரத்து 236 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 29,243 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் 21 லட்சத்து 20 ஆயிரத்து 889 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 802 பேர் உள்ளனர்.

378 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

அரசு மருத்துவமனையில் 240 பேரும், தனியார் மருத்துவமனையில் 138 பேரும் என மொத்தம் 378 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் இதுவரை 28 ஆயிரத்து 906 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு விவரம்

கோவையில் 2056 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் 1365 பேரும், ஈரோட்டில் 12520 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும் படிக்க...

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனாவால் மரணம் இல்லை- எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு! - 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதி!!

English Summary: Decreasing corona infection in Tamil Nadu, 15,759 people affected today !!
Published on: 11 June 2021, 09:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now