மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 March, 2021 1:37 PM IST

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் டிசம்பர் வரை தொடரும் என பாரதிய கிசான் யூனியனின் செய்தி தொடர்பாளருமான ராகேஷ் திகாயத் கூறியுள்ளார்.

மகா பஞ்சாயத்துகள்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 100 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விவசாய அமைப்புகளில் ஒன்றான பாரதிய கிசான் யூனியனின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், செய்தி தொடர்பாளருமான ராகேஷ் திகாயத். விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு மாநிலங்களுக்கு சென்று மகா பஞ்சாயத்துகளை நடத்தி வருகின்றார்.

அந்தவகையில் மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்துகளை நடத்திய பின் நேற்று பிரயாக்ராஜ் வந்தார் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் இந்த புதிய வேளாண் சட்டங்கள் வர்த்தகர்களையும் அழித்து, சிறு வணிகங்களையும் மூடுவதுடன், சிறு தொழில் துறையையும் சீரழித்து விடும். மேலும் வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்காகவே இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

போராட்டம் டிசம்பர் வரை நீடிக்கும்

விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி போராட்டக்களத்திலேயே இருக்கப்போவதில்லை. மாறாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று இந்த சட்டங்களின் பாதகங்கள் குறித்து எடுத்துரைக்க இருக்கிறேன். எங்களின் போராட்டம் இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் வரை தொடர வாய்ப்பு இருக்கிறது என்றார்.

English Summary: Delhi farmers protest likely to last till December
Published on: 15 March 2021, 01:33 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now