News

Thursday, 28 October 2021 07:21 PM , by: R. Balakrishnan

Artificially ripened bananas!

கோயம்பேடு சந்தையில், உணவு பாதுகாப்பு விதிகளை மீறி, செயற்கை முறையில் வாழைப் பழங்கள் (Bananas) பழுக்க வைக்கப்பட்டு வருவதாக, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

திடீர் சோதனை

உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் சதீஷ் குமார் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், கோயம்பேடு மார்க்கெட்டில் வாழைப் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யும், 45 கடைகள் மற்றும் கிடங்குகளில், நேற்று திடீர் சோதனை நடத்தினர்.இதில், பழங்களை செயற்கையாக பழுக்க வைப்பதற்காக 'எத்திலின்' என்ற ரசாயனத்தை நேரடியாக வாழைக்காய்கள் மீது தெளித்து பழுக்க வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

செயற்கை முறை

இதையடுத்து, செயற்கை (Artificial) முறையில் பழுக்க வைக்கப்பட்ட, 15 டன் வாழைப் பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை கோயம்பேடு சந்தை வளாகத்தில் இயங்கும் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கிடங்கில் கொட்டி அழித்தனர். சம்பந்தப்பட்ட கடைகளுக்கு, உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.

மேலும் படிக்க

பயிர்களுக்கான மண் வளத்தை பராமரிக்கும் முறைகள்!

அதிக மகசூலை அள்ளிக் கொடுக்கும் நட்சத்திர மல்லிகை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)