மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 January, 2023 8:30 PM IST
Devotees

காஞ்சிபுரம் அடுத்த தாமல் கிராமத்தில் பழமையான ஶ்ரீமந்தைவெளி மாரி எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று திருவிழா நடைபெறுவது வழக்கம்‌. அந்த வகையில் இந்த ஆண்டும் காணும் பொங்கலை முன்னிட்டு ஶ்ரீமந்தைவெளி மாரி எல்லையம்மன் கோவிலில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு மந்தைவெளி மாரி எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வண்ண வண்ண மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார்.

பின்னர் மேளதாளங்கள் முழங்க தாமல் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மந்தைவெளி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடனாக தீச்சட்டி எடுத்தல், உடலில் முள் போடுதல், அலகு குத்துதல், வேடமிட்டு நடனம் ஆடுதல் போன்ற வேண்டுதல்களுடன் ஊர்வலமாக சென்று அம்மனை தரிசித்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.

இத்திருவிழாவில் தாமல் கிராமத்தை சுற்றியுள்ள பாலுசெட்டிசத்திரம், முட்டவாக்கம், கீழம்பி, ஆரியபெரும்பாக்கம், கிளார், முசரவாக்கம், தைப்பாக்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

மேலும் படிக்க:

ரேஷன் கார்டில் மாற்றம் - நாளை சிறப்பு முகாம்

பொதுமக்களுக்கு ஷாக்1 தமிழ்நாடு முழுவதும் பால் விலை உயர்வு!

English Summary: Devotees who grieved the body and paid fine
Published on: 20 January 2023, 08:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now