சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 14 October, 2022 12:05 PM IST
Dindigul: Minister M. Subramanian launched Ashwagandha cultivation
Dindigul: Minister M. Subramanian launched Ashwagandha cultivation

திண்டுக்கல் மாவட்டத்தில் 200 ஏக்கர் தோட்டத்தில் அஸ்வகந்தா (Withania somnifera) என்ற மருத்துவ தாவர சாகுபடியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். மேலும், திண்டுக்கல் மருத்துவ தாவரங்களின் மையமாக மாற அஸ்வகந்தா சாகுபடி தொடக்கப் புள்ளியாக இருக்க வேண்டும் என்றார். இந்த தொடக்கத்தின் பயன் என்ன?

நாட்டில் உள்ள ரூ. 1,000 கோடி மதிப்பிலான மருத்துவத் தாவரச் சந்தையானது, மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் ஆராய்ந்து விவசாயிகள் தங்கள் சாகுபடியை அளக்க மகத்தான வாய்ப்பை வழங்குகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். ஆந்திரா, குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அஸ்வகந்தா அதிகளவில் பயிரிடப்படுகிறது எனவும் சுட்டிக்காட்டினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். சித்த மருந்துகளை உற்பத்தி செய்யும் மாநில ஏஜென்சியான Tampcol, மூலப்பொருட்களுக்கு பிற மாநிலங்களை சார்ந்துள்ளது. எனவே, மாநிலத்தில் வளர்க்கப்படும் மருத்துவ தாவரங்கள் Tampcol-க்கு பெரிதும் பயனளிக்கும்.

Tampcol என்றால் என்ன? (What is Tampcol?)

தமிழ்நாடு மருத்துவ தாவர பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகம் லிமிடெட் (TAMPCOL) 1983 இல் தொடங்கப்பட்டது, இது தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட டெக்னோ பொருளாதார சாத்தியக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. கார்ப்பரேஷன் ஆகஸ்ட் 1985 இல் தனது வணிக நடவடிக்கைகளை அண்ணா மருத்துவமனை வளாகத்தில் சிறிய அளவில் தயாரித்து சந்தைப்படுத்துவதன் மூலம் மூலிகை முடி டானிக் (ஒரு சித்த மருத்துவம்) என்ற ஒரு தயாரிப்புடன் தொடங்கியது என்பது குறிப்பிடதக்கது.

தயாரிப்புகள் என்னென்ன?(What are the products?)

இதன் முதன்மைத் தயாரிப்பு, TAMPCOL ஹெர்பல் ஹேர் டோனிக், ஹேர் ஆயில்களின் சந்தையில் முன்னணியில் உள்ளது, மேலும் பல்வேறு வகையான மூலிகை தயாரிப்புகளான-9 தைலம், 9 சூரணங்கள், 6 பாஸ்மாஸ் 2 லெஹ்யம்கள்(6 Bhasmas 2 Lehyams), 2 டிகாக்ஷன்கள் (Decoctions) மற்றும் 2 களிம்புகளை (Ointments) வழங்குகிறது. கூடுதலாக, சித்தா தவிர ஏழு ஆயுர்வேதம் மற்றும் ஏழு யுனானி தயாரிப்புகளையும் இவை வழங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும், இந்திய மருந்துகளை வழங்கும், ஒரே நிறுவனம் இதுவாகும்.

மேலும் படிக்க: தமிழகம்: 5ம் வகுப்பு கல்வி போதும், கிராம உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!

எனவே, தமிழகத்தில் 100 சித்த நகர்ப்புற சுகாரதார மையங்களை அமைக்க மாநில அரசு ஆயுஷ் அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சுப்பிரமணியன் கூறினார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறுவுறுத்தலின் பேரில் மத்திய ஆயுஷ் ரூ.12.98 கோடியை அனுமதித்துள்ளது. தேனி, திருவண்ணாமலை, நாமக்கல் மாவட்டங்களில் 50 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவமனைகளும், பழனியில் சித்த மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்படும். மருத்துவக் கல்லூரிக்கு முன்பாக, பழனிக்கு 50 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.

நிகழ்ச்சியில் பேசிய உள்ளூர் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி மற்றும் ஆர்.சக்ரபாணி ஆகியோர் அஸ்வகந்தா சாகுபடியை விவசாயிகள் சிறப்பாகப் பயன்படுத்த ஊக்கப்படுத்தினர். இதை முன்னிட்டு தமிழ்நாடு மாநில மருத்துவ தாவரங்கள் வாரியம் சார்பில் விவசாயிகள் தங்கள் பண்ணைகளில் மருத்துவ குணம் கொண்ட செடிகளை பயிரிடுவது குறித்து ஒரு நாள் பயிற்சி அளித்தனர். வாரிய MD எஸ்.கணேஷ், திண்டுக்கல் MP பி. வேலுசாமி, பழனி MLA செந்தில்குமார், வேடசந்தூர் MLA எஸ்.காந்திராஜன், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் (மதுரை) கே.பி. சத்தியமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க:

100 யூனிட் இலவச மின்சாரம் பெற ஆதார் இணைப்பு கட்டாயம்: அதிரடி அறிவிப்பு!

வேளாண் செய்திகள்: விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.20 ஆயிரம் வரவு!

English Summary: Dindigul: Minister M. Subramanian launched Ashwagandha cultivation
Published on: 14 October 2022, 11:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now