நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 April, 2022 7:06 PM IST
Disabled people need a smart card to get welfare benefits

மதுரை மாவட்டத்தில் 18,940 மாற்றுத்திறனாளிகள் 'ஸ்மார்ட்' அடையாள அட்டை (Smart Id Card) பெற்றுள்ள நிலையில் இன்னும் பத்தாயிரம் பேர் பெறாமல் உள்ளனர். மாற்றுத் திறனாளிகள் சலுகைகள் பெற சிறிய புத்தகம் போன்ற தேசிய அடையாள அட்டை இருக்க வேண்டும். இந்த அட்டையை பெற்றோருக்கு தற்போது 'ஸ்மார்ட்' கார்டுகள் வழங்கப்படுகின்றன.

ஸ்மார்ட் கார்டு (Smart card)

விண்ணப்பித்தோருக்கு மதுரை நகரில் திங்கள், வியாழன் நாட்களிலும், உசிலம்பட்டி மருத்துவமனையில் 2, 3வது திங்களன்றும் மருத்துவ பரிசோதனைக்குபின் தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதை பெற்றவர்கள் அடுத்த கட்டமாக ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதனை தேசிய அடையாள அட்டையின் அனைத்து பக்கங்களின் பிரதிகள், ஆதார் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கையெழுத்து மற்றும் கைரேகை பதிவுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்டத்தில் 46 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் பலர் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளனர். இவர்களுக்கு 'ஸ்மார்ட்' கார்டு வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இருப்பினும் 28,308 பேர் விண்ணப்பித்து 18,940 பேர்தான் ஸ்மார்ட் கார்டு பெற்றுள்ளனர்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில், இந்த அட்டையை பெற்றவர்களே அரசின் நலத்திட்ட உதவிகளை பெறமுடியும். இந்த அட்டையில் பயனாளியின் எல்லா விவரங்களும் இடம் பெற்றிருக்கும். இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட அலுவலகத்தில் பெறலாம் என்றார்.

மேலும் படிக்க

கால் டாக்சி கட்டணம் உயர்வு: ஓலா, உபர் முடிவு!

தமிழகத்தில் திடீர் மின் தடை: அரசு சொல்லும் காரணம் என்ன?

English Summary: Disabled people need a smart card to get welfare benefits!
Published on: 23 April 2022, 07:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now