மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 June, 2021 7:07 PM IST

கொரோனாத் தொற்று இந்தியா முழுவதும் அதிவேகமாக பரவி வந்த நிலையில், தற்போது ஓரளவு குறைந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK Stalin), கொரோனாப் பெருந்தொற்றை கட்டுப்படுத்த போதிய நிதி இல்லாததால் பொது மக்களிடையே நிதியுதவி வழங்க கோரிக்கை விடுத்திருந்தார். இதற்காக, பார்வை குறைபாடுடைய மாற்றுத் திறனாளி, தன் மகனின் படிப்புக்காக வளர்த்த, இரண்டு கன்று குட்டிகளை விற்று, கொரோனா நிவாரண நிதி (Corona Relief Fund) வழங்கினார்.

மாற்றுத் திறனாளி

தஞ்சாவூர் மாவட்டம், ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 52. பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி. இவரது மனைவி மகேஷ்வரி, 42.
இவர்களுக்கு, கல்லுாரியில் படிக்கும் பிரசாந்த், 20, பிளஸ் 2 முடித்துள்ள சஞ்சய், 17 என இரண்டு மகன்கள் உள்ளனர். ரவிச்சந்திரன், 100 நாள் வேலை செய்தும், மாற்றுத் திறனாளி உதவித்தொகையிலும், குடும்பத்தை நடத்தி வருகிறார்.

நிவாரண நிதி

இந்நிலையில், தன் இளைய மகனை கல்லுாரியில் சேர்க்க, இரண்டு கன்றுக்குட்டிகளை வளர்த்தார். அதை, 6,000 ரூபாய்க்கு விற்று, முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக, தஞ்சை கலெக்டர் கோவிந்தராவிடம் நேற்று வழங்கினார்.

இது குறித்து ரவிச்சந்திரன் கூறியதாவது: நான் பி.எஸ்.சி., - பி.எட்., படித்து, தனியார் பள்ளியில் ஆசிரியராக (Teacher) வேலை பார்த்து வந்தேன். 20 ஆண்டுகளுக்கு முன், பார்வையில் கோளாறு ஏற்பட்டது. கொரோனா நிவாரண நிதி வழங்க கையில் பணம் இல்லை. மகன் படிப்பு செலவுக்கு விற்கலாம் என வைத்திருந்த, இரு கன்றுக்குட்டிகளை விற்று நிதி வழங்கினேன்.

மேலும் படிக்க

நோய் எதிர்ப்பு சக்தியில் கோவேக்சினை மிஞ்சியது கோவிஷீல்டு தடுப்பூசி - ஆய்வில் கண்டுபிடிப்பு!

கொரோனா உறுதியாகும் விகிதம் குறைந்து, மீள்வோர் சதவீதம் அதிகரிப்பு!

English Summary: Disabled person who sold calves and donated corona funds!
Published on: 10 June 2021, 07:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now