வருடத்திற்கு 4000 குவிண்டால்- உருளை சாகுபடியில் அசத்தும் உ.பி. விவசாயி ! அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 17 November, 2020 7:04 PM IST
Credit : Molbak's

பயிர்களை பூச்சிகள் தாக்கி, நோய்களை உண்டாக்கி விளைச்சலை பாதிக்கிறது. அந்த வகையில் தற்போது, உருளை கிழங்கு (Potatoes) செடிகளை நோய் தாக்கி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நோய்த் தாக்குதல்:

நீலகிரி மாவட்டத்தில் (Nilgiris district) ஆண்டுக்கு, 3,700 ஏக்கர் பரப்பளவில், உருளை கிழங்கு பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் உருளை கிழங்குக்கு, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில சந்தையிலும் அதிக கிராக்கி உள்ளது. மேட்டுப்பாளையம் சந்தையில், கடந்த மாதம் கிலோவுக்கு, 65 ரூபாய் வரை விலை கிடைத்தது. தற்போது கிலோவுக்கு, 45 முதல் 50 ரூபாய் வரை விலை கிடைத்து வருகிறது. இந்நிலையில், நடுவட்டம் டி.ஆர்., பஜார் பகுதியில் பயிரிட்டுள்ள உருளை கிழங்கு செடிகளை நோய் தாக்கி உள்ளதால், விவசாயிகளுக்கு நஷ்டம் (Loss) ஏற்படும் அபாயம் உள்ளது.

தோட்டக்கலை துறை ஆய்வு

தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிவசுப்ரமணியம் (Sivasubramaniam) கூறுகையில், ''நவம்பர் மாதத்தில் பனிப்பொழிவு (Snowfall) துவங்கி விடும் என்பதால், அதற்கு முன் உருளை கிழங்கு அறுவடை பணிகள் முடிந்து விடும். இப்பகுதியில், காலநிலை (Climate) மாறி உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். ''தற்போது, பனிப் பொழிவு ஏற்பட்டு, அதன் காரணமாக செடிகள் கருகி இருக்கலாம். வேறு நோய்கள் தாக்க வாய்ப்பில்லை. எனினும், நேரடியாக ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில், அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

விவசாய நிலங்களில் ஈரப்பதத்தை அளவிட புதியக் கருவி கண்டுபிடிப்பு! கோவை விஞ்ஞானிகள் 5 பேருக்கு தேசிய நீர் விருது

கூட்டுறவு வங்கிகளைப் போல் இனி மாநில வேளாண் வங்கியிலும் விவசாயக் கடன்!

English Summary: Disease attack on potatoes! Nilgiri farmers worried!
Published on: 17 November 2020, 07:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now