News

Friday, 09 September 2022 08:30 AM , by: R. Balakrishnan

Medical waste

மருத்துவ கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டினால் மருத்துவமனை உரிமம் ரத்து செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மருத்துவ கழிவுகள் (Medical Waste)

புதுச்சேரி அரசு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மருத்துவமனைகள், பொதுசுகாதார மையங்கள் மற்றும் பரிசோதனை ஆய்வு கூடங்களில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவக்கழிவுகள் நகராட்சி அல்லது பஞ்சாயத்து திடக்கழிவு தொட்டிகளில் கொட்டப்படுகிறது.

இத்தகைய செயல்பாடுகள் துப்புரவு ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும். உயர் மருத்துவக்கழிவு மேலாண்மை விதி 2016-ன் படி அதற்குரிய தொட்டிகளில் சேகரித்து துத்திப்பட்டில் உள்ள பொதுமருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையம் மூலமாக அதை முறையாக வெளியேற்ற வேண்டும்.

 

உரிமம் ரத்து

இதை மீறி செயல்படும் மருத்துவமனை, பொது சுகாதார மையம், பரிசோதனை கூடங்களில் வணிக உரிமம் ரத்து செய்யப்படும். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை வசூலிக்கப்படும்.

மேலும் படிக்க

காலை உணவாக நீராகாரம்: உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

அடுத்த மாதத்தில் அமலுக்கு வருகிறது புதிய மின் கட்டணம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)