மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 January, 2021 9:59 AM IST
Credit : Hindu Tamil

2021 ஜனவரி 11 வரை, 16,17,979 விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் ரூ 24,399.63 கோடி மதிப்புள்ள 83,41,536 பருத்தி பேல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. காரீப் சந்தைப் பருவம் 2020-21 ஆண்டிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் (The minimum support price) விளைபொருட்கள் கொள்முதல் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நெல் கொள்முதல்:

பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், தெலங்கானா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், குஜராத், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பிகார், சத்திஸ்கர், கேரளா, மேற்கு வங்கம், அசாம், கர்நாடகா மற்றும் ஜார்கண்டில் நெல் கொள்முதல் (Paddy purchase) சுமுகமாக நடந்து வருகிறது. இங்கு 2021 ஜனவரி 11 வரை 541.11 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில் செய்யப்பட்ட 429.20 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதலோடு ஒப்பிடும் போது இது 26.07 சதவீதம் அதிகமாகும். மேலும், மாநிலங்கள் வேண்டுகோள்படி, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து 51.66 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களை, ஆதரவு விலையில் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பருத்தி கொள்முதல்:

கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து 5,089 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் (Copra coconut) கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 2021 ஜனவரி 11 வரை, 16,17,979 விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் ரூ 24,399.63 கோடி மதிப்புள்ள 83,41,536 பருத்தி பேல்கள் (Cotton bales) கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வருடந்தோறும் சரியான நேரத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் பொருத்திக் கொள்முதல் நடைபெறுவதால், எந்தவித இழப்பும் இன்றி சுமுகமாக முடிகிறது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

இரயில்வேவுடன் பிஸ்னஸ் செய்ய ஆசையா?அருமையான வாய்ப்பு!

மக்காச்சோள கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்!

English Summary: Distribution of Rs. 24,399.63 crore to 16,17,979 farmers who purchased cotton
Published on: 14 January 2021, 09:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now