மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 February, 2023 2:18 PM IST
District Collectors information about Ranikhet disease vaccination camp for poultry

நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் பெருவாரியான மக்கள் கோழிகளை வளர்த்து அதன் மூலம் ஓரளவு வருமானம் ஈட்டி தங்களது குடும்ப செலவினங்கலை மேற்கொண்டு வருகின்றனர். புறக்கடையில் இத்தகைய கோழிகள் இரண்டு லட்சத்து எழுபத்தெட்டாயிரம் எண்ணிக்கையில் பொதுமக்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு வளர்க்கப்படும் கோழிகளுக்கு பல்வேறு வகையான நோய் தொற்றுகள் ஏற்படுவது இயல்பு. இதில் கோழிக் கழிச்சல் (வெள்ளக் கழிச்சல் / இராணிகேட்) நோய்ப்பாதிப்பால் கோழிகள் இறப்பு ஏற்பட்டு கிராம மக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும். கோழிக்கழிச்சல் நோய் அனைத்து வயது கோழிகளையும் தாக்கும் தன்மையுடையது.

கோழிக் கழிச்சல் நோயின் அறிகுறிகளான கோழிகள் உடல் நலம் குன்றியும் சுறுசுறுப்பின்றியும் உறங்கியபடி இருக்கும். தீவனம், தண்ணீர் எடுக்காமலும் இருக்கும். எச்சம் வெள்ளைநிறத்தில் அதிக துர்நாற்றத்துடன் இருக்கும். கோழிகளின் இறகுகள் சிலிர்த்து தலைப்பகுதி உடலுடன் சேர்ந்தே இருக்கும்.

கோழிக் கழிச்சல் நோய் கோழிகளைத் தாக்கும் நோய்களிலேயே மிகவும் கொடுமையானது. இந்நோய் எற்படுவதை முன்கூட்டியே பொருட்டு ஆண்டுதோறும் இரு வாரகோழிக் கழிச்சல் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: தமிழகத்தில் தொடர் மழை நீடிக்கும், வானிலை ஆய்வு மையம் தகவல்!

எனவே, ஆண்டுதோறும் கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக பிப்ரவரி மாதத்தில் இருவார கோழிக் கழிச்சல் தடுப்பூசி முகாம் நகர, கிராம மற்றும் குக்கிராமங்களில் நடத்தப்பெற்று, அவ்விடங்களிலுள்ள கோழிகளுக்கு தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல் இவ்வாண்டு 2.78 லட்சம் கோழிகளுக்குத் தடுப்பூசிப் பணிமேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 01.02.2023 முதல் 14.02.2023 முடிய இருவார காலங்களுக்குத் தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்படவிருக்கிறது. அதே சமயம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தத்தமது பகுதிகளில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி முகாம் நடைபெறும் இடங்களுக்கு 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய கோழிகளை கொண்டு சென்று கோழிக்கழிச்சல் தடுப்பூசி போட்டு பயனடையுமாறு திருவள்ளுர் மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க:

உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக 40% மானியம்!

அசத்தலான தினை அவுல் வைத்து சூப்பர் டிபன்!

English Summary: District Collectors information about Ranikhet disease vaccination camp for poultry
Published on: 03 February 2023, 02:18 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now