மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 October, 2018 1:09 PM IST

தீபாவளி பண்டிகையின் முக்கிய அம்சமான, இனிப்பு தயாரிப்பில் ஸ்வீட் ஸ்டால்களில் தரமிக்க பொருட்களை பயன்படுத்தி, இனிப்பு வகைகளை தயாரிக்க வேண்டும் என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தரம் மிக்க பொருட்களை கொண்டு, இனிப்பு, பலகாரம் தயாரிக்கவும், சிறு நிறுவனங்கள் தற்காலிக லைசென்ஸ் பெறவும், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இனிப்பு தயாரிக்கும் நிறுவனங்கள், அனுமதிக்கப்பட்ட நிறங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவு கையாளுதல், பரிமாறுதல், ஆகிய பணிகளை மேற்கொள்பவர்கள் கையுறைகள், தலைகவசம், மேலங்கிகள் அணிய வேண்டும். இனிப்பு தயாரிக்கும் இடங்கள் சுத்தமாகவும், ஈக்கள் இன்றியும் இருக்க வேண்டும். பணியின் போது ஊழியர்கள் குட்கா, பான்பராக், வெற்றிலை, புகையிலை உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். இனிப்பு தயாரிக்க வனஸ்பதி, நெய் பயன்படுத்தினால், அதுகுறித்து கடையில் போர்டு வைக்க வேண்டும். அடைக்கப்பட்ட எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எண்ணெய் உபயோகிக்கக் கூடாது. பெங்காலி வகை இனிப்புகளை, தனியாக வைக்க வேண்டும். முக்கியமாக, உணவு பொருட்கள் அனைத்திலும், தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இத்துடன் தற்காலிமாக இனிப்பு, கார வகைகள் தயாரிப்பில் ஈடுபடுவோர், உணவு பாதுகாப்பு துறையில், தங்கள் விபரங்களை பதிவு செய்து, சான்றிதழ் பெற வேண்டும். பொதுமக்கள், தாங்கள் வாங்கும் இனிப்புகளின் தரம் குறித்து, தெரிந்து கொள்ள வேண்டும். புகார் இருப்பின், உணவு பாதுகாப்பு துறைக்கு தெரிவிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

English Summary: Diwali festival - quality importance in Sweet preparation
Published on: 24 October 2018, 01:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now