News

Saturday, 15 October 2022 07:40 PM , by: T. Vigneshwaran

Free Food

இந்த முறை தீபாவளியன்று, சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டுள்ள கோடிக்கணக்கான ரயில் பயணிகளுக்கு இனிப்பான செய்தியை ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ரயிலில் இலவச உணவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம்... நீங்கள் ரயிலில் பயணிக்கப் போகிறீர்கள் என்றால் உணவுக்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. எந்த ரயிலில் எந்த சூழ்நிலையில் இலவச உணவு வசதி கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

இலவச உணவு மற்றும் தண்ணீர்

நீங்கள் ரயிலில் பயணிக்கப் போகிறீர்கள் என்றால், ஐஆர்சிடிசி தரப்பில் இருந்து இலவச உணவு, குளிர் பானங்கள் மற்றும் தண்ணீருக்கு பணம் எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் உங்கள் ரயில் தாமதமானால் மட்டுமே இது நடக்கும். இந்த உணவு உங்களுக்கு IRCTC ஆல் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்திய ரயில்வேயின் விதிகளின்படி, ரயில் தாமதமாகும்போது IRCTC-ன் கேட்டரிங் கொள்கையின் கீழ் பயணிகளுக்கு உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த வசதி எப்போது கிடைக்கும்?

ஐஆர்சிடிசி விதிகளின்படி, உங்கள் ரயில் 2 மணிநேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வரும்போது இந்த சலுகை உண்டு. அதுவும், எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிப்பவர்களுக்கு இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ போன்ற எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் கட்டணம் ஏதும் செலுத்தாமல் இலவச உணவை சாப்பிடலாம்.

இத்துடன், ரயிலில் காலை உணவாக டீ-காபி, பிஸ்கட் போன்றவையும் கிடைக்கும். மாலை சிற்றுண்டி, டீ அல்லது காபி மற்றும் நான்கு ரொட்டி துண்டுகள் கொடுக்கப்படும். இது தவிர, மதியம் பயணிகளுக்கு ரொட்டி, பருப்பு, காய்கறிகள் போன்றவை இலவசமாக கிடைக்கும். சில சமயங்களில் முழுமையாகவும் கொடுக்கப்படுகிறது. உங்கள் ரயில் 2 மணி நேரம் தாமதமாக இருந்தால் பயணிகள் உணவை ஆர்டர் செய்யலாம்.

மேலும் படிக்க:

100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு

பெண்களுக்கு கால்நடைகள் 90% மானியம், இதோ விவரம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)