சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 27 September, 2022 7:22 PM IST
Iphone at low price
Iphone at low price

பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் இந்த வேலையில் பல்வேறு நிறுவனங்களும் பண்டிகை கால சலுகைகளை முன்னிறுத்தி தங்கள் பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்வதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வரப்போகும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக அளிக்கப்படும் தீபாவளி விழாக்கால சலுகைகளில் தங்கள் பொருட்களை குறைந்த விலைக்கு விற்பனைக்கு கொண்டு வர ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

செப்டம்பர் 26 திங்கட்கிழமை தொடங்கப்போகும் இந்த சலுகை விழாவில் பல முக்கியமான பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. என்னென்ன பொருட்கள் எந்த விலையில் விற்கப்படும் என்பது போன்ற முழு தகவல்களை ஆப்பிள் நிறுவனம் இப்போது வரை அறிவிக்கவில்லை. ஆனால் கடந்த காலங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாட்டை ஒப்பிட்டு பார்க்கும்போது ஐபோன்களுக்கான சலுகைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 14 சீரிஸ் வகை வாடிக்கையாளர்கள் இடையே மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கியுள்ளது. ஐபோன் 14 சீரியஸ் ஒருபுறம் இருந்தாலும் சிலர் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11, ஐ போன் 12 மாடல்களை வாங்குவதிலும் ஆர்வமாக இருக்கின்றனர். எனவே இந்த மாடல்களின் மீதும் அதிக விலை சலுகைகளை புகுத்தி இதனை அதிக அளவில் ஆப்பிள் நிறுவனம் விற்க முயற்சி செய்யலாம் என்பது போலவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

விலை சலுகைகளை மட்டுமல்லாமல் சில இலவச பொருட்களையும் இணைத்து விற்பனையை அதிகரிக்க செய்ய ஆப்பிள் நிறுவனம் முயற்சிக்கலாம். அந்த வகையில் ஐபோன் வாங்குபவருக்கு கூடவே ஏர் பாட்-களும் இலவசமாக கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது. ஏனெனில் கடந்த காலங்களில் ஐபோன் 12, ஐபோன் 13, ஐபோன் 13 மினி ஆகியவை சந்தைக்கு வந்தபோது அதனுடன் ஏர் பாட்ஸ் இலவசம் என்ற சலுகையை அறிமுகப்படுத்தி அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஐபோன்களை விற்று தீர்த்தது ஆப்பிள் நிறுவனம்.

முக்கியமாக இந்தியாவில் ஐபோன்களுக்கான ரசிகர்கள் அதிகரித்துவிட்ட காரணத்தினால் இந்த சலுகை பெருமளவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு கை கொடுக்கும் என்று தெரிகிறது.ஐபோன் தவிர்த்து மேக் புக், ஐபேட், மற்றும் ஆப்பிள் வாட்ச் ஆகிய பொருட்களுக்கும் சலுகைகள் அளிக்கப்படலாம். ஆனால் எது எப்படி இருப்பினும் ஐபோன்களை அதிக அளவில் விற்பனை செய்வது தான் அன்ன நிறுவனத்தின் குறிக்கோளாக இருக்கும். ஏனெனில் ஐபோன்களின் மூலம்தான் அதிக பங்குகளை அந்நிறுவனம் ஈர்த்துள்ளது.

மேலும் இந்த விலைச்சலுகைகளை பெறுவதற்காக சில வங்கிகளுடன் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொண்டும், கேஷ் பேக் ஆஃபர்கள் மற்றும் கூப்பன்கள் ஆகிய பல முறைகளில் சலுகைகளை அளிக்க ஆப்பிள் நிறுவனம் தயாராகி வருகிறது. ஏற்கனவே ஆப்பிள் 14 சீரியஸ் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் நிலையில், அதன் மீது அளிக்கப்படும் விலை சலுகைகள் இன்னும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

நற்செய்தி: ஆவின் நிறுவனத்தின் தள்ளுபடி அறிவிப்பு

English Summary: Diwali Sale: Chance to buy iPhone at low price
Published on: 27 September 2022, 07:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now