மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 June, 2021 8:37 AM IST
Credit : Dinamalar

கொரோனா வைரசின் தன்மை நம் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது என்பதால் அடுத்தடுத்த அலைகள் எப்போதும் உருவாகும் என்பதற்கு தேதி குறிப்பதை தவிர்க்க வேண்டும் என, கொரோனா தடுப்பு படையின் தலைவர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளர்.

டெல்டா பிளஸ்

கொரோனா இரண்டாவது அலை ஏப்ரல் - மே மாதங்களில் மிக தீவிரமாக பரவியது. ஒரு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்தன. 'இந்த இரண்டாவது அலைக்கு (second wave) உருமாற்றம் அடைந்த 'டெல்டா' வகை வைரஸ் தாக்கமே காரணம்' எனக் கூறப்பட்டது. இந்நிலையில் 'டெல்டா பிளஸ்' (Delta plus) என்ற புதிய உருமாறிய வைரஸ் வகை சமீபத்தில் கண்டறியப்பட்டது.

மூன்றாவது அலை

மூன்றாவது அலை உருவாவதை தவிர்க்க முடியாது என்றும் இதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர் என்றும் நிபுணர்கள் எச்சரித்தனர். 'டிசம்பரில் மூன்றாவது அலை உருவாக வாய்ப்பு உள்ளது' என மத்திய அரசின் கொரோனா பணிக்குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா சமீபத்தில் தெரிவித்தார்.

இது குறித்து கொரோனா தடுப்பு படை தலைவரும், நிடி ஆயோக் உறுப்பினருமான டாக்டர் வி.கே.பால் நேற்று கூறியதாவது: உருமாறிய 'டெல்டா பிளஸ்' என்ற புதிய வகை வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த அறிவியல் பூர்வமான விபரங்கள் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளன.
இது புதிய வகை தொற்று வேகமாக பரவும் தன்மை உடையதா தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துமா தடுப்பூசியின் (Vaccine) செயல்திறனை பாதிக்குமா என்பது போன்ற கேள்விகளுக்கு நம்மிடம் முழுமையான பதில் இல்லை. இதற்கு நாம் சில காலம் காத்திருக்க வேண்டும். தொற்று பரவலின் தன்மை என்பது நம் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது.

புதிய அலை உருவாவதும், உருவாகாமல் இருப்பதும் நம் கைகளில் உள்ளது. அப்படி இருக்கையில் அடுத்தடுத்த அலைகள் எப்போது நிகழும் என்பது குறித்து தேதிகள் நிர்ணயிக்காமல் இருப்பதே நலம்.

மேலும் படிக்க

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி பி ஏவுகணையின் சோதனை வெற்றி

சிறு வியாபாரிகளுக்கு ரூ.1.25 லட்சம் கடன்: நிர்மலா சீதாராமன் அதிரடி

English Summary: Do not set a date for the next wave of corona virus: Corona prevention force leader!
Published on: 29 June 2021, 08:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now