News

Thursday, 05 September 2019 02:11 PM

உலக அளவில் அதிகமாக  சாகுபடி செய்யும் பழங்களில் வாழை பழமும் ஒன்று. அதே போன்று பெரும்பாலான மக்களால்  அதிகம் விரும்பி உண்ணப்படும் பழமாகவும்  இருந்து வருகிறது. பருவ நிலை மாற்றத்தால் இந்தியாவின் உற்பத்தி குறைவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வாழையை பொறுத்தவரை உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் ஒருங்கே தருவதால் தவிர்க்க முடியாத உணவாகவும், அதே சமயத்தில் பெருபாலானவருக்கு அதிக வருமானத்தை தரும் தொழிலாகவும் இருந்து வருகிறது.

கிராமம், நகர்ப்புறம் என அனைத்து தர மக்களாலும் விரும்பி உண்ணப்படுவதியால் இந்தியா மட்டும் அல்லாது உலக சந்தையில் வாழை பழத்திற்கு என்று தனி இடமுண்டு. 27 நாடுகளில் தவிர்க்க முடியாத காலை உணவாகவும் இருந்து வருகிறது. 1961 பிறகு வாழை சாகுபடியானது அபாரமாக இருந்து வந்தது.

உலகின் மிகப் பெரிய உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில் பருவ நிலை மாற்றம் வாழை உற்பத்தியினை பெருமளவில் பாதித்து வருகிறது. இந்நிலை தொடருமானால் 2050 க்குள் வாழை இவ்வுலகை விட்டு சென்று விடும் என்னும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.   

பருவநிலை மாற்றத்தை கருத்தை கொண்டு தக்க நடவெடிக்கையை விரைவில்  எடுக்க வேண்டுமென ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)