மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 June, 2022 7:53 AM IST

பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு டோக்கன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது இலங்கை அரசு. இதனால் மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், தற்போது கடும் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுகிறது.  

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நீடித்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க, முன் எப்போதும் இல்லா வகையில், அங்கு பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

ராணுவ பாதுகாப்பு

இந்நிலையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இனி பெட்ரோல், டீசல் வாங்க விரும்புவோருக்கு முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதற்காக காவல்துறையினரும், ராணுவ வீரர்களும் பயன்படுத்தப்படுவார்கள்.

டோக்கன் கட்டாயம்

பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் மொபைல் நம்பரை பதிவு செய்துவைத்துக்கொள்ள வேண்டும். பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படும். இதன் அடிப்படையில் வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் போட்டுக்கொள்ளலாம்.

இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த வாரமும், அடுத்த வாரமும் இலங்கைக்கு பெட்ரோல், டீசல் வராது. அடுத்து எப்போது இலங்கைக்கு பெட்ரோல், டீசல் கொண்டுவரப்படும் என்பதே தெரியவில்லை என அந்நாட்டின் எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் இறக்குமதி குறித்து ர்ஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கையின் அமைச்சர்கள் ரஷ்யாவுக்கு செல்கின்றனர். பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, விலை உயர்வு, போக்குவரத்து சிக்கல் என இலங்கை மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் படிக்க...

நல்லெண்ணெய் விலை கிடு கிடு ஏற்றம் - ஒரே வாரத்தில் ரூ.166 உயர்வு!

13 ஆயிரம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்!

English Summary: Do you have petrol? Then buy a token!
Published on: 29 June 2022, 07:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now