News

Wednesday, 28 September 2022 07:20 PM , by: T. Vigneshwaran

16 செல்வங்கள்

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்பது பதினாறு பிள்ளைகளை குறிக்கும் சொல் அல்ல! பதினாறு செல்வங்களை குறிக்கும் சொல் ஆகும். பதினாறு செல்வங்கள் என்றால் உண்மையில் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து அபிராமி அந்தாதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணம் ஆனவர்கள் அல்லது யாராவது பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கும் பொழுது அவர்கள் வாயிலிருந்து ‘பதினாறு செல்வங்களும் பெற்று, பெருவாழ்வு வாழ்க’ என்று கூறுவதை கேட்டிருப்போம். பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர்கள் சிறியோர்களை வாழ்த்துவது தமிழர் மரபு.

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்பது பதினாறு பிள்ளைகளை குறிக்கும் சொல் அல்ல! பதினாறு செல்வங்களை குறிக்கும் சொல் ஆகும். பதினாறு செல்வங்கள் என்றால் உண்மையில் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து அபிராமி அந்தாதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்

துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!

அதாவது, நோயில்லாத உடல், சிறப்பான கல்வி, குறைவில்லாத தானியம், தீமை இன்றி பெறும் செல்வம், அற்புதமான அழகு, அழியாத புகழ், என்றும் இளமை, நுட்பமான அறிவு, குழந்தைச் செல்வம், வலிமையான உடல், நீண்ட ஆயுள், எடுத்தக் காரியத்தில் வெற்றி, சிறப்பு மிக்க பெருமை, நல்ல விதி, துணிவு, சிறப்பான அனுபவம் இந்த 16 செல்வங்களையும் தான் குறிக்கின்றனர்.

மேலும் படிக்க:

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்- டிடிவி

திருச்சியை அச்சுறுத்தும் புதிய வகை 'டைப்பஸ்' காய்ச்சல்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)