News

Monday, 31 May 2021 06:31 PM , by: R. Balakrishnan

Credit : Mint

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை (Corona Second Wave) வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, கொரோனாத் தொற்றை பரவ விடாமல் தடுத்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு விரைவாகவும், எளிதாகவும் ஆலோசனை வழங்க வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி உதவி வருகிறார்கள் மருத்துவர்கள்.

வாட்ஸ்அப் குழு

தமிழகம் முழுதும் உள்ள டாக்டர்கள், தமிழினி கோவிட்19 டீம், வாட்ஸ் ஆப் குழுவை (Whatsapp Group) ஏற்படுத்தி, கொரோனா நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

தமிழகம் முழுதும் உள்ள 70க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இதில் இணைந்துள்ளனர். கொரோனா தொற்று நோயாளிகள், 97866 05092 எண்ணுக்கு பரிசோதனை விபரங்களை அனுப்பினால், டாக்டர்கள் அவர்களுக்கான ஆலோசனைகளை பதிவு செய்கின்றனர்.

ஆலோசனை

குழுவின் அட்மின் டாக்டர் சுபாஷ்காந்தி கூறியதாவது: கோவிட்19-க்கான அறிகுறிகள் (Symptoms) குறித்த விபரம், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் போன்ற இணை நோய்களால் பாதிப்பு, மனநல ஆலோசனை, கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு ஆலோசனை வழங்க இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் 97866 05092 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அல்லது thamilinipulanam@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கோ தொடர்பு கொண்டால், தேவையான ஆலோசனை அனுப்பி வைக்கப்படும். எவ்வித கட்டணமும் கிடையாது.

மேலும் படிக்க

விற்க முடியாமல் கொடியிலேயே அழுகும் கிர்ணி பழங்கள்! இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

கொரோனா வைரஸால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - பிரதமர் அறிவிப்பு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)