மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 December, 2020 4:09 PM IST
Credit : Polimer news

ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் வீணாகும் தக்காளிகளை, கொள்முதல் செய்து மதிப்புக்கூட்டுப்பொருட்களாக மாற்ற நவீன தொழிற்சாலை அமைத்து தர வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 5000 ஏக்கரில் தக்காளி சாகுபடியாகிறது. இதுமட்டுமின்றி, தக்காளிக்கென சிறப்பாக அய்யலுார், கோபால்பட்டியில் பிரத்யேக சந்தைகளே செயல்படுகின்றன. மாவட்டத்தில் தக்காளி விலையை நிர்ணயிக்கும் முக்கிய சந்தைகளாகவும் இவை இருக்கின்றன. பல்வேறு சத்துக்கள் நிறைந்த தக்காளியின் விலை ஒருபோதும் நிலையாக இருப்பதில்லை. இதுமட்டுமின்றி பூச்சி, நோய் தாக்குதலால் மகசூல் பாதிக்கப்படுகிறது. இதையும் தாண்டி சாகுபடி செய்யும் தக்காளியில் 30 சதவீதம் வரை வீணாகிறது. தக்காளியை நீண்ட நாட்கள் சேமித்து வைக்க முடியாது. அதனால் அறுவடை முடிந்த கையோடு விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு உள்ளது.

பொங்கல் பரிசு ரூ.2,500/- வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்!!

வீணாகும் தக்காளி

தக்காளி விளைச்சல் அதிகரிக்கும் போது அதன் விலை வெகுவாக குறைந்துவிடுகிறது. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் சாலையோரம் தக்காளியை கொட்டி வீணாக்குவது தொடர் கதையாக உள்ளது. மேலும் சிலர், பறிப்பு கூலி, போக்குவரத்துச் செலவு என மேலும் செலவு செய்ய விரும்பாமல் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர்.

ஜாம்-சாஸ் தொழிற்சாலை

நெல், அரிசி, கொப்பரை போன்றவற்றிற்கு உரிய விலை நிர்ணயம் செய்து அரசே நேரடியாக கொள்முதல் செய்கிறது. அதேபோல தக்காளியையும் கொள்முதல் செய்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விலையின்றி வீணாகும் தக்காளிகளை சேமிக்கவும், விவசாயிகளை பாதுகாக்கவும் திண்டுக்கல்லில் தக்காளியில் 'சாஸ்' அல்லது 'ஜாம்' தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என அந்த மாவட்ட விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். 

பொங்கலையொட்டி தயார் நிலையில் கரும்புகள்! உரிய விலையை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை!

தொழிற்சாலை அமைக்கும் எண்ணம் இல்லை

இதுகுறித்து திண்டுக்கல் தோட்டக்கலை துணை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவிக்கையில், அரசு தரப்பில் தொழிற்சாலை அமைக்கும் எந்த திட்டமும் இல்லை என்றும், மாறாக விவசாயிகளே ஒன்று கூடி மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்த வேண்டும் என்றார். விவசாயிகளின் முயற்சிக்கு அரசு துணை நிற்கும் என்று கூறிய அவர், அதற்கு தேவையான கடனுதவிகளை மானியத்தில் வழங்கப்படும் என்றும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்த தோட்டக்கலை உதவி செய்யும் என்றும் கூறினார்.

இயற்கை விவசாயியாக உருவெடுக்கும் எம்.எஸ்.தோனி! - பழ சாகுபடியை தொடங்குகிறார்!!

English Summary: Don't waste tomatoes anymore Here the Simple way to make value added products and get more profit
Published on: 22 December 2020, 04:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now