News

Thursday, 31 March 2022 09:41 AM , by: R. Balakrishnan

Doorstep Scholarship

வருவாய்த் துறை அமைச்சரை தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால், 72 மணி நேரத்தில் பயனாளிகளின் வீட்டு வாசலுக்கே, உதவித்தொகைக்கான உத்தரவு கடிதம் கிடைக்கும் வகையில், புதிய திட்டம் கர்நாடகாவில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் வருவாய்த் துறை அமைச்சர் அசோக் இத்திட்டம் பற்றி எடுத்துரைத்தார்.

உதவித்தொகை (Scholarship)

மாநிலத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியுதவி உட்பட, மாதாந்திர உதவித்தொகைகள் சரியாக கிடைப்பதில்லை என புகார்கள் வந்துள்ளன. என்னை போனில் தொடர்பு கொண்டால், 72 மணி நேரத்தில் பயனாளிகளின் வீட்டு வாசலுக்கே, உதவித்தொகைக்கான உத்தரவு கடிதம் கிடைக்கும் வகையில், புதிய திட்டத்தை அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது.

மாநிலத்தில் 60 லட்சம் விவசாயிகளுக்கு, ஜாதி, வருவாய், நில ஆவணங்கள் இலவசமாக சமீபத்தில் அவர்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்க்கப்பட்டன. அதுபோல, இத்திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும்.

மேலும் படிக்க

இல்லம் தேடி வரும் ரேஷன்: பஞ்சாப் முதல்வரின் அதிரடி திட்டம்!

தமிழகத்திற்கு தேசிய நீர் விருது: நீர் மேலாண்மையில் மூன்றாவது இடம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)