News

Thursday, 07 April 2022 07:25 PM , by: R. Balakrishnan

Drone spraying pesticides on agricultural crops

உடுமலை பகுதிகளில், ட்ரோன் வழியாக மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உடுமலை பகுதிகளில், தென்னை, வாழை, மக்காச்சோளம், நெல், காய்கறி பயிர்கள் சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் பணிக்கு, தொழிலாளர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால், இதற்கான செலவினம் அதிகரித்துள்ளது.

மருந்து தெளிப்பு (Spraying Pesticides)

தென்னையை தாக்கும், மாவுப்பூச்சி, குரும்பை உதிர்தல், செந்தேன் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு மருந்து அடிக்க முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில், தற்போது உடுமலை பகுதிகளில், நவீன முறையில், பயிர்களுக்கு ட்ரோன் வழியாக மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விவசாயிகள் கூறியதாவது: தற்போது ஸ்பிரேயர் வழியாக மருந்து அடிக்க, ஆட்கள் தேவை அதிகரித்துள்ளது. உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன், பல மணி நேரம் அடிக்க வேண்டியுள்ளது. 11.50 லிட்டர் கொள்ளளவு கொண்ட, ட்ரோன் வழியாக, மருந்து தெளித்தால், நேரமும், செலவும் மிச்சமாகிறது.

ஏக்கருக்கு, 800 ரூபாய் முதல், தென்னைக்கு, 2 ஆயிரம் செலவாகிறது. ஒரு ஏக்கர் பரப்பளவு பயிர்களுக்கு, அரை மணி நேரத்தில் மருந்து அடிக்க முடிகிறது.

மேலும் படிக்க

தரிசு நிலத்தை வாங்கி தோட்டத்தை உருவாக்கிய நடிகை தேவயானி!

கோடையில் காய்கறி செடிகளை எப்படி காப்பாற்றலாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)