News

Friday, 02 August 2019 11:19 AM

தமிழகம் மற்றும்  புதுச்சேரியில் இன்னும் ஓரிரு தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

வடக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதிகளின் காற்று வீசும் திசை மாறியுள்ள காரணத்தால் கடந்த ஒரு வாரமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை குறைந்துள்ளது. மேலும் இன்னும் ஓரிரு தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 5:30 மணி வரை எடுக்கப்பட்ட வெப்பநிலை ஆய்வில் திருச்சி, தெற்கு மதுரை, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் 104 டிகிரி, காரைக்கால், கரூர் பரமத்தி, நாமக்கல், நாகப்பட்டினம் ஆகிய 7 இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

நேற்றைய நிலவரம்படி ஒரு இடங்களில் கூட குறிப்பிடும் படியான மழை பதிவாகவில்லை, மற்றும் அடுத்த ஓரிரு தினங்களுக்கு வெப்பம் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

K.Sakthipriya
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)