சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 21 May, 2021 2:07 PM IST
Mullai

வேதாரண்யத்தில் முழு ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வாங்க வராததால், டன் கணக்கில் முல்லைப்பூக்கள் வீணாகிறது. விளைச்சல் அமோகமாக இருந்தும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

முல்லைப்பூ சாகுபடி

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலம், மருதூர், நெய்விளக்கு உள்ளிட்ட 20 கிராமங்களில் சுமார் 2ஆயிரம் ஏக்கரில் முல்லை பூ சாகுபடி நடைபெறுகிறது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை இந்த முல்லைப்பூ சீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் முல்லைப்பூ பட்டுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தீபாவளி (Diwali), பொங்கல் (Pongal), ஆயுதபூஜை, புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்களில் பூக்கள் அதிக விலைக்கு விற்பனையாகும்.

கொரோனா ஊரடங்கு

தற்போது கொரோனா ஊரடங்கு (Corona Curfew) உத்தரவால் கோவில் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டுள்ளது. பூக்கடைகள் நடத்த தடை மற்றும் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் வேதாரண்யம் பகுதியில் நாள் ஒன்றுக்கு 1 டன் மட்டுமே முல்லைப்பூ வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

டன் கணக்கில் பூக்கள் தேக்கம்

மேலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பூக்கள் வாங்க வியாபாரிகள் வராததால் டன் கணக்கில் பூக்கள் தேக்கம் ஏற்பட்டு வீணாகிறது. காலை 6 மணி முதல் 10 மணிக்குள் வாகனங்கள் செல்ல அனுமதி என்பதால் அதிகாலையில் விவசாயிகள் எழுந்து 7 மணிக்குள் பூக்கள் பறிப்பதால் குறைந்த அளவே வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் பூக்களை பறிக்காமலே செடிகளில் விட்டு விடுவதால் அழுகி விணாகி விடுகிறது. 

சீசன் காலத்தில் முல்லைப் பூ கிலோ ரூ.50 முதல் ரூ.100 வரை கொள்முதல் செய்யப்பட்டது. சீசன் இல்லாத நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை கிலோ ரூ.1,000 வரை விற்பனை ஆகிறது. ஆனால் தற்போது திருவிழாக்களுக்கு அரசு தடை விதித்துள்ளதால் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ முல்லைப்பூ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது.

விலை வீழ்ச்சி

திருவிழா காலங்களில் ரூ.1000 முதல் ரூ.2000 வரை விற்பனையாகும். முல்லை பூ விளைச்சல் அமோகமாக இருந்தும் கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் வாங்க வராததால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் முல்லைப்பூ சாகுபடியை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் உள்ள 10 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே முல்லைப்பூ விவசாயிகளுக்கு வங்கி கடன் உதவியும், இழப்பீடும் (Compensation) வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க

பருவம் தவறிய மழையால் பாதித்தது முந்திரி விவசாயம்! இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

பொங்கல் கரும்பு உற்பத்திக்கு, விதைக் கரும்புகள் தயார் செய்யும் பணி தீவிரம்

English Summary: Due to Corona Curfew Tons of wasted Rotana flowers!
Published on: 21 May 2021, 02:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now