மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 August, 2022 1:28 PM IST
Cultivation Area

பாசன தேவை பூர்த்தியாகி உள்ளதால், தமிழகத்தில் வேளாண் பயிர்கள் சாகுபடி பரப்பு, 10.3 லட்சம் ஏக்கராக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அண்டை மாநிலங்களில் இருந்தும் நீர்வரத்து கிடைத்து வருகிறது. இதனால், பெரும்பாலான அணைகள் நிரம்பி உள்ளன. அவற்றில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு தொடர்ந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் மட்டமும் பல மாவட்டங்களில் உயர்ந்துள்ளது. எனவே, பாசன பற்றாக்குறை தீர்ந்துள்ளதால், விவசாயிகள் சாகுபடி பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

சாகுபடி பரப்பு (Cultivation Area)

தற்போதைய குறுவை சாகுபடி பருவத்தில், 4.36 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. சிறுதானியங்கள் 1.78 லட்சம் ஏக்கர், பருப்பு வகைகள் 99 ஆயிரம் ஏக்கர், கரும்பு சாகுபடி 95 ஆயிரம் ஏக்கர், எண்ணெய் வித்துக்கள் 2.13 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. மொத்தமாக 10.36 லட்சம் ஏக்கரில், வேளாண் பயிர்கள் சாகுபடி களைகட்டி வருகிறது.

கடந்தாண்டு, இதே காலகட்டத்தில், 10.31 லட்சம் ஏக்கரில், வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தன. தற்போது, அதைவிட சற்று கூடுதலாக சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. விரைவில், சம்பா பருவ நெல் சாகுபடி காலம் தொடங்கவுள்ளது

அப்போது, மற்ற பயிர்களின் சாகுபடியும் அதிகரிக்கும் என்பதால், அரசின் உணவுப் பொருட்கள் உற்பத்தி இலக்கை பூர்த்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கையில், வேளாண் துறையினர் உள்ளனர்.

மேலும் படிக்க

PM Kisan: ஆகஸ்ட் இறுதியில் ரூ. 2000: முக்கிய அறிவிப்பு!

வறட்சியை தாங்கும் சுரைக்காய்: ஓராண்டில் நல்ல மகசூல்!

English Summary: Due to the lack of irrigation solved, the area of ​​agricultural cultivation has increased!
Published on: 21 August 2022, 01:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now