News

Monday, 06 June 2022 09:23 PM , by: R. Balakrishnan

e-ticket on buses

நடப்பாண்டு இறுதிக்குள் பேருந்தில் பயண டிக்கெட் முறைக்கு மாறாக, இ-டிக்கெட் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பேசினார்.

ஸ்மார்ட் கார்டு (Smart Card)

பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தப்படும். அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையைப் பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்து கொள்ளலாம். பள்ளி வாகனங்களில் முன்னும் பின்னும் கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்தவுடன் முழுமையாகக் கண்காணிக்கப்படும்.

இ-டிக்கெட் (e-ticket)

இந்த ஆண்டு இறுதிக்குள் பேருந்தில் பயண டிக்கெட் முறைக்கு மாறாக இ-டிக்கெட் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்படும். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின், கூகுள் பே, மொபைல் ஸ்கேனிங் உள்ளிட்ட முறைகளை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் சேரும் குழந்தைகளுக்கு ஊக்கப்பரிசு வழங்க தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு!

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: அமைச்சர் அறிவிப்பு.!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)