News

Thursday, 03 November 2022 06:21 PM , by: T. Vigneshwaran

Business

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் 26 வயதாகும் பால வெங்கடேஷ், இவர் பயன்படுத்தப்பட்ட பழைய செய்தித்தாள்களை காகித பைகளாக மாற்றி அதனை கடைகளில் விற்பனை செய்து தினசரி வருமானம் பார்த்து வருகிறார்.

எம்பிஏ பட்டப்படிப்பை முடித்துள்ள பால வெங்கடேஷ் , தற்போது தனியார் மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே அதிகாலை நேரத்தில் வீடு வீடாக சென்று செய்தித்தாளை விநியோகம் செய்யும் பணியில் சேர்ந்து தன்னுடைய 19 வயது முதல் தொடர்ச்சியாக 5 ஆண்டுகளாக பகுதி நேர வேலையாக கல்லூரி படிப்பை மேற்கொண்டவாரே செய்தித்தாள் விநியோகம் செய்யும் பணியில் பணியாற்றி வந்துள்ளார்.

செய்தித்தாள் விநியோகிக்கும் பணியில் இருந்த பொழுது , பயன்படுத்தப்பட்ட செய்தித்தாள்களை உபயோகமான பொருட்களாக மாற்ற பழைய செய்தித்தாள்களை காகித பைகளாக மாற்றி அதனை வியாபாரமாக செய்யலாம் என்று யோசனை இவருக்கு தோன்றியுள்ளது.

அதன்படி தனது பெற்றோர்களுடன் சேர்ந்து செய்தித்தாள்களை குறிப்பிட்ட விலைக்கு வெளியில் இருந்து வாங்கி அதனை வெவ்வேறு அளவுகளில் காகித பை ஆக தயாரித்து தேனி மாவட்டம் முழுவதும் உள்ள வணிக கடைகளுக்கு சென்று விநியோகித்து வருகிறார் .

பகல் நேரங்களில் இதர வேலைகளை முடித்துக் கொண்டு தினசரி மாலை வேலைகளில் காகிதப்பையை தயாரிக்கும் வேலையினை பால வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தார் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க:

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் நவோதயா பள்ளிகள்

நீரிழிவைத் தடுக்கும் கொத்தமல்லி விதைகள்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)