News

Sunday, 07 November 2021 09:32 AM , by: R. Balakrishnan

Tomato price are high

தொடர் மழையால் (Continuous Rain) வரத்து குறைந்து தக்காளி ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை ஆனது.

தொடர் மழை

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு ஆந்திரா மாநிலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தாளவாடி, நாமக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

கடந்த வாரம் 14 கிலோ கொண்ட சிறிய தக்காளி பெட்டி ரூ.600-க்கும், 25 கிலோ கொண்ட பெரிய தக்காளி பெட்டி ரூ.850-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தக்காளி விலை உயர்வு

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. தொடர் மழை காரணமாக ஈரோடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. நேற்று 14 கிலோ கொண்ட சிறிய தக்காளி பெட்டி ரூ.850 முதல் ரூ.900 வரையும், 25 கிலோ கொண்ட பெரிய பெட்டி ரூ.1,500 முதல், ரூ.1,600 வரையும் விற்பனை ஆனது.
இதேபோல் சில்லரை வியாபாரத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கும் மளிகை கடைகளில் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மழை குறைந்தால் தக்காளி விளைச்சல் அதிகரித்து விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை விலை உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க

மழையால் பாதித்த பயிர்கள்: கணக்கெடுக்கும் பணி துவக்கம்!

மதுரையில் தயார் நிலையில் முருங்கை ஏற்றுமதி மண்டலம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)