மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 December, 2020 10:30 PM IST
Credit : Nakkheeran

பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) அரசின் விவசாய கொள்கைளை எதிர்த்தும், திரும்பப் பெற கோரியும் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகள் கடந்த 7 நாட்களாக டெல்லியில் போராட்டம் (Protest) நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் தற்போது அறிவித்துள்ள மூன்று புதிய விவசாயச் சட்டங்களால் தங்களுக்கு அதிகளவிலான பாதிப்புகள் ஏற்படுகிறது என்றும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிகளவிலான பயன் உள்ளது என்பது விவசாயிகளின் கருத்து. இதன் காரணமாகவே புதிய விவசாயச் சட்டங்களை எதிர்த்து, திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் டெல்லி கடும் குளிரையும் பொருட்படுத்தாமலும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காய்கறிகளின் விலை உயர்வு!

விவசாயிகள் நடத்தும் போராட்டத்தின் எதிரொலியாக டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களில் காய்கறிகளின் விலை (Vegetables Rate) அதிகளவில் உயர்ந்துள்ளது. மொத்த விலை காய்கறிகள் மற்றும் இதர விவசாய உற்பத்தி பொருட்களின் விநியோகம் தடைப்பட்டுள்ள காரணத்தால் காய்கறிகளின் மொத்த விலையில் 50 முதல் 100 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது என டெல்லி காய்கறி வியாபாரிகள் (Delhi Vegetables Merchants) தெரிவித்துள்ளனர்.

காய்கறிகள் வரவு குறைவு:

முக்கிய வழித்தடம் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய 3 மாநில விவசாயிகளின் போராட்டத்தால் சிங்கூ மற்றும் டிகிரி எல்லை போக்குவரத்துப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹிமாச்சல பிரதேசம் (Himachal Pradesh) மற்றும் ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir) பகுதியில் இருந்து வரும் காய்கறிகளின் வரவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி காய்கறி வியாபாரிகள் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்கள் அல்லாமல் வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகளை வாங்கத் துவங்கியுள்ள காரணத்தால், நேற்று முதல் மக்களுக்குத் போதுமான காய்கறிகள் தேவையான அளவிற்கு கிடைத்து வருவதாக டெல்லி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பிலும் ஆதரவு பெருகி வரும் நிலையில், விவசாயிகளின் போராட்டம் விரைவில் வெற்றிபெற அனைவரும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர்

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

பயிர் சேத அறிக்கையை அரசிடம் ஒப்படைக்கும் வேளாண் துறை!

விவசாய நிலத்திலிருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றி, 100 நாள் வேலையாட்கள் சாதனை!

English Summary: Echo of the farmers' struggle in Delhi! Rising vegetable prices!
Published on: 02 December 2020, 10:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now