நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 March, 2022 7:21 AM IST
Rs 4 crore worth of tea stagnant in Coonoor

இரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான, நீலகிரி தேயிலைத் துாள் வர்த்தகம் தேக்கம் அடைந்துள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னுார் தேயிலை ஏல மையத்தில், வாரம்தோறும் தேயிலைத் துாள் ஏலம் விடப்படுகிறது. இங்கு நேரடியாகவும், 'ஆன்லைன்' வாயிலாகவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி (Export) செய்யப்படுகிறது.

தேயிலை வர்த்தகம் பாதிப்பு (Impact on the tea trade)

கடந்த, 50 ஆண்டுகளாக நீலகிரி தேயிலையை ரஷ்யா அதிகளவில் இறக்குமதி செய்கிறது. தற்போது, ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, நீலகிரி தேயிலை வர்த்தகம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம், குன்னுாரில் நடந்த ஏலத்தில், 32 சதவீதம் விற்பனையாகாததால், 4 கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை துாள் தேக்கம் அடைந்துள்ளது.

இரஷ்யா - உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வந்தாலீ தான், தேயிலைகளை இரஷ்ய நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். மேலும், தேயிலைத் தேக்கத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

தேயிலைத் தேக்கத்தால், அங்கு கூலி வேலை செய்யும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரஷ்யா - உக்ரைன் போர் விரைவாக முடிந்தால் மட்டுமே, இங்கு சகஜ நிலை திரும்பும் என்று தேயிலைத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க

பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்: மகிழ்ச்சியில் விவசாயிகள்!

ரஷ்யா - உக்ரைன் போர்: பிரதமர் மோடி தலையிட வேண்டும் - உக்ரைன் தூதரகம் வேண்டுகோள்!

English Summary: Echo of war: Rs 4 crore worth of tea stagnant in Coonoor!
Published on: 01 March 2022, 07:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now