News

Monday, 20 December 2021 10:53 AM , by: Deiva Bindhiya

Egg price as low as Rs 5! What is the reason?

முட்டையின் விலையில் ஒவ்வொரு நாளும் மாற்றம் வர வாய்ப்புகள் உள்ளது. முட்டையின் விலையில் ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாவட்டங்கள் வேறுபட்டவை. மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் முட்டையின் விலை மாறுபட வாய்ப்புள்ளது. மேலும், முட்டை மொத்த சந்தையில் இருந்து மொத்த விற்பனை வரையிலும் ஒரு விலையும், சில்லறை விற்பனைக் கடைகள் வரையிலும் ஒரு விலையும் இருக்கும், இதை நம்மால் மாற்ற முடியாது. 

முட்டை விலையானது NECC (National Egg Coordination Committee) மற்றும் உற்பத்தியாளர்களால் கையிருப்பு, வரத்து, முட்டை சந்தையின் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. ஆகவே மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், முட்டையின் விலையில் நிர்ணய விலை இல்லை. மாநிலம், புவியியல் இருப்பிடம், கிடைக்கும் தன்மை போன்றவற்றின் அடிப்படையில் ஷாப்பிங் மால்கள்/ சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளுக்கு, இடையே விலை வித்தியாசம் இருந்து வருகின்றன.

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5.05 ரூபாயில் இருந்து 4.95 ரூபாயாக நிர்ணயக்கப்பட்டது. இன்று சென்னையில் முட்டையின் விலை ரூ.5-க்கு விற்பனையாகிறது.

முட்டை அத்தியாவசை தேவையில் ஒன்றாகும், தங்கத்தின் விலைப்போல் இதன் விலையிலும் மாற்றம் இருந்து வருவது சற்று சிரமமாக இருந்தாலும், இதை மக்கள் எதிர்க்கொள்கின்றனர். இந்நிலையில் இன்று நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.05 லிருந்து ரூ.4.95 ஆக நிர்ணயமாகி இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியே அளிக்கிறது. நாளை மீண்டும் முட்டையின் விலையில் மாற்றம் வரலாம், எனவே இன்று நினைத்து மகிழ்ச்சியடைந்திடுவோம்.

நாம் நன்கு அறிவோம், இந்தியாவில் முட்டை உற்பத்தி மற்றும் விற்பனைக்கு வரி இல்லை, எனவே அனைத்து வகையான முட்டைகளுக்கும் GST விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முட்டையின் விலையில் மாற்றம் வந்துள்ளது, மேலும் மாற்றங்கள் வரவும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும் படிக்க:

முட்டை விலை 2 ரூபாய் அதிகரிக்கலாம்! எப்போது, ஏன்?

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)