News

Monday, 15 April 2019 03:22 PM

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இ..எல். (EIL) பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதால் அவற்றை நிரப்புவதற்கான  அறிவிப்பு தரப்பட்டுள்ளது.

இந்நிறுவனமானது கடந்த அரை நூற்றாண்டாக பல்வேறு பொறியியல் துறைகளில்  திட்டங்களை அறிமுக படுத்தி அவற்றை செயல்படுத்தியுள்ளது. அணுசக்தி, சூரிய சக்தி, நீர் மற்றும் கழிவு மேலாண்மை ஆகிய வளர்ந்துவரும் துறைகளில் பல உலக நாடுகளில் தடம் பதித்து வருகிறது.

 இந்திய பொறியியல் நிறுவனத்தில்  மொததம் 96 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் :  30/04/2019

வயது வரம்பு : 48 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., .பி.சி., முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: 15 முதல் 20 ஆண்டுகள்  

காலிப் பணியிடங்கள் : 96

    துறைவாரியான காலியிடங்கள்

  சிவில் - 13 

  மெக்கானிக் - 31

     எலக்ட்ரிக்கல் - 17 

  வெல்டர் - 14 

 இன்ஸ்ருமென்டேஷன் - 14 

 கிடங்கு - 04

 பாதுகாப்பு - 3

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு பெரும்பாலும் டெல்லியில்  நடத்தப்படும்.

பணியிடம்: டெல்லி/ குருகாவூன்

மேலும் விவரங்களுக்கு www.engineersindia.com என்ற மின்னஞ்சலை அணுகலாம்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)