மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 January, 2021 10:38 PM IST
Credit : Zee News

விவசாய மின் இணைப்பு உள்ளிட்ட பணிகளில் பயன்படுத்த, மின் வாரியம், 3,000 டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் செய்ய உள்ளது. விவசாயத்திற்குத் தேவையான மின் இணைப்பை பல்வேறு சலுகைகளுடன் அளித்து வரும் மின்சாரத் துறை (Electricity), தற்போது விவசாயிகளின் நலன் காக்க டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் செய்யத் திட்டமிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

60 ஆயிரம் மின் இணைப்புகள்:

தமிழக மின் வாரியம், துணை மின் நிலையங்களுக்கு வரும் மின்சாரத்தை, மின் கம்பம், கேபிள் ஆகிய மின் வழித் தடங்களில் அனுப்பி, டிரான்ஸ்பார்மர் (Transformer) மற்றும் மின் விநியோக பெட்டி உதவியுடன் விநியோகம் செய்கிறது. வரும் மார்ச் மாதத்திற்குள், விவசாயத்திற்கு, சாதாரணம், விரைவு திட்டத்தின் கீழ், 60 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. அதற்கான பணி, முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணி முடிவடைந்த பின்னர், விரைவாக விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.

உதய் திட்டம்

மத்திய அரசின், 'உதய்' திட்டத்தின் (Uday Scheme) கீழ், பல்வேறு பகுதிகளில், புதிய மின் வழித் தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பயன்படுத்துவதற்காக, மின் வாரியம், தற்போது, 63 'கிலோ வோல்ட் ஆம்பியர்' திறனில், 3,000 டிரான்ஸ்பார்மர்களை வாங்க உள்ளது. மேலும், 15 ஆயிரம் கி.மீ., துாரத்திற்கு மின் கம்பியும்; 40 ஆயிரம் மின் கம்பங்களும் கொள்முதல் செய்யப்பட உள்ளன. அவற்றை தரமாக (Quality) வாங்குவதில், அதிக கவனம் செலுத்துமாறு, வாரிய பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கொள்முதல் பணி முடிவடைந்ததும், மின் இணைப்புக்கான பணிகள் தொடங்கப்பட்டு, விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கப்படும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

கூடுதல் மகசூல் பெற வம்பன்-4 பாசிப்பயறு இரகம்!

காரைக்காலில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம்! வேளாண்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்!

தென்னை ஆராய்ச்சி பணியைத் துவங்க வேண்டுமென விவசாயிகள் அரசிடம் கோரிக்கை!

English Summary: Electricity Board decides to purchase 3,000 transformers! 60,000 farmers will benefit!
Published on: 10 January 2021, 10:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now