News

Friday, 14 October 2022 07:41 PM , by: T. Vigneshwaran

Employement

மாவட்டம் தோறும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு ஏதுவாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில், பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்கான தகுதிகள், சம்பளம் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது : விழுப்புரம் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை சனிக்கிழமை (15ம் தேதி) நடக்கிறது.

ஓசூர் தனியார் நிறுவனத்தால் நடந்தப்பட உள்ள முகாம் காலை 9:00 மணிக்கு துவங்குகிறது. முகாமில், 2020-21 மற்றும் 2022ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 20க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 நாட்கள் பயிற்சியும், மாத சம்பளமாக 16,557 ரூபாய் மற்றும் உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதி, பட்டப்படிப்பு பயில்வதற்கான வாய்ப்புகளுடன் கூடிய நிரந்தர பணி நியமனம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

5 ரூபாய்க்கு ஒரு தோசை, 20 ரூபாயில் பசியாற்றும் சாயல்குடி அம்மாச்சி

விவசாயிகளுக்கு நற்செய்தி: 700 முதல் 1200 லிட்டர் பால் தரும் எருமை இனம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)