நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 October, 2022 7:52 AM IST
IT Jobs for Students

தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கவும் தமிழக அரசு சார்பாக நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு தரப்பிலிருந்து நிறைய வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு நிறையப் பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் இணைந்து வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய ஓராண்டு பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு (Employment)

இத்திட்டத்தின் கீழ், 2021-22ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, HCL நிறுவனம் பயிற்சியோடு பணி வாய்ப்புகளை வழங்குகின்றது. தமிழக அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் வாயிலாக அரசுப் பள்ளி மாணவர்கள் 2,000 நபர்களுக்கு HCL Techbee Early Career Program-க்கான பயிற்சி கட்டணம் முழுவதையும் வழங்குகின்றது. இத்திட்டத்தின் வாயிலாக மாணவர்களுக்கு தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் பயிற்சியோடு HCL Technologies நிறுவனத்தில் முழுநேர பணிவாய்ப்பு கிடைக்கும்.

Internship பயிற்சியின் போது 7வது மாதம் முதல், மாதம்தோறும் ரூ.10,000 உதவித் தொகையைப் பெறலாம். பணியில் சேர்ந்தவுடனேயே துவக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூ.1.70 லட்சம் முதல் ரூ.2.20 லட்சம் வரை HCL Technologies நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே உயர்கல்வியை துவங்குவதற்கு BITS Pilani, Amity மற்றும் SASTRA பல்கலைக்கழகங்களில் வாய்ப்பைப் பெறலாம். மேலும் அவர்களின் கல்விக் கட்டணத்தின் ஒரு பகுதியை HCL Technologies நிறுவனம் வழங்குகின்றது. இத்திட்டமானது மாணவர்கள் சிறுவயதிலேயே உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தங்கள் பணியினை துவங்க வாய்ப்பளிக்கிறது.

மாநிலம் முழுவதிலும் இந்த HCL “Techbee”திட்டத்தின் தேர்வு முகாமினை அக்டோபர் 28 முதல் 30ஆம் தேதி வரை, சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு தகுதியுள்ள மாணவர்களைத் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க

பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்: அமைச்சரின் சூப்பரான அறிவிப்பு!

1000 ரூபாய் போதும்: கல்லூரி மாணவர்களும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்!

English Summary: Employment for Educated Youth: Super Notification of Tamil Nadu Government!
Published on: 29 October 2022, 07:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now