சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 14 June, 2022 12:58 PM IST
Endless Corona

கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, தொற்று தடுப்பு நடவடிக்கையில் அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வேண்டுகோள் விடுத்துள்ளார். பல மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளதை அடுத்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார்.

கொரோனா வைரஸ் (Corona Virus)

சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. பரிசோதனைகள் குறைந்துள்ளன. சரியான நேரத்தில் பரிசோதனை செய்வதன் வாயிலாக மட்டுமே தொற்று பரவலை கண்டறிய முடியும். அதேபோல உருமாறிய வைரஸ் பரவலை கண்டறிய, மரபணு தொடர் பரிசோதனையில் அனைத்து மாநிலங்களும் கவனம் செலுத்த வேண்டும்.

கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தொற்று தடுப்பு நடவடிக்கையில் நாம் விழிப்புடன் செயல்படுவது அவசியம். சர்வதேச பயணியர் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். தொற்று பாதிப்புக்கு எளிதில் ஆளாகக் கூடிய வயதினருக்கு தடுப்பூசி போடுவதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
மேலும், 12 - 17 வயதுள்ளவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த வேண்டும். பள்ளிகளில் முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று, 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி போட
வேண்டும். அது மட்டுமின்றி, 18 - 59 வயதினருக்கு தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் போடுவதை அமைச்சர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க

கோர்பேவாக்ஸ் தடுப்பூசி: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு!

அதிகரிக்கும் கொரோனா தொற்று: தயார் நிலையில் சுகாதாரத்துறை

English Summary: Endless Corona: Awareness Needed!
Published on: 14 June 2022, 12:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now