News

Sunday, 22 January 2023 12:45 PM , by: R. Balakrishnan

EPFO Subscribers

கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் EPFO நிறுவனத்தில் புதிதாக 16.26 லட்சம் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். முந்தைய ஆண்டை காட்டிலும் இது 16.5% வளர்ச்சி என மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. முந்தைய அக்டோபர் மாதத்தை காட்டிலும் நவம்பர் மாதத்தில் EPFO சந்தாதாரர்களின் எண்ணிக்கை 25.67% அதிகரித்துள்ளது. நவம்பர் மாதத்தில் இணைந்த 16.26 லட்சம் சந்தாதாரர்களில் 8.99 லட்சம் பேர் EPFO வளையத்தில் முதல்முறையாக இணைந்தவர்கள்.

EPFO சந்தாதாரர்கள் (EPFO Subscribers)

புதிதாக இணைந்த 8.99 லட்சம் பேரிலும் 2.77 லட்சம் பேர் 18 முதல் 21 வயது வரம்பிலானவர்கள். அடுத்து 22 முதல் 25 வயது வரம்பிலானவர்கள் 2.32 லட்சம் பேர். ஒட்டுமொத்தமாக இணைந்த 8.99 லட்சம் புதியவர்களில் 56.60% பேர் 18 முதல் 25 வயது வரம்பிலானவர்கள். முதல்முறை வேலை தேடுவோர் ஏராளமானவர்கள் அமைப்புசார்ந்த துறைகளில் வேலைக்கு சேர்ந்துள்ளதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதுபோக 11.21 லட்சம் பேர் மீண்டும் EPFO உறுப்பினர்களாக இணைந்துள்ளதாகவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல் வாயிலாக தெரிய வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தின் (ESIC) கீழ் நவம்பர் மாதத்தில் மட்டும் 21,953 புதிய நிறுவனங்கள் பதிவு செய்துகொண்டுள்ளன. மேலும், 18.86 லட்சம் புதிய உறுப்பினர்கள் தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தின் கீழ் இணைந்துள்ளனர்.

இவர்களில் 18 முதல் 25 வயது வரம்பிலானவர்கள் 8.78 லட்சம் பேர். புதிதாக 3.51 லட்சம் பெண்கள் இணைந்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், 63 மூன்றாம் பாலினத்தவரும் இணைந்துள்ளனர்.

மேலும் படிக்க

பங்குச்சந்தையில் சேராத ஜீவன் ஆசாத் திட்டம்: LIC-யின் புதிய அறிமுகம்!

ஒவ்வொரு மாதமும் புதிய மின் கட்டணம்? விரைவில் அமலுக்கு வரும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)