நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 December, 2022 10:32 PM IST
EPFO Pension

EPFO குறைந்தபட்ச பென்சன் தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நெடுநாட்களாக நீடித்து வருகிறது. குறைந்தபட்ச பென்சன் தொகை தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்தும் மத்திய அரசு இன்னும் முடிவெடுக்காமல் தாமதித்து வருகிறது. இந்நிலையில், குறைந்தபட்ச பென்சன் தொகையை உயர்த்துவது குறித்து நாடாளுமன்றத்தில் அரசு பதில் அளித்துள்ளது.

தொழிலாளர் பென்சன் திட்டம் (Employee Pension Scheme)

ஊதியதாரர்கள் அனைவருக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (EPFO) வருங்கால வைப்பு நிதி கணக்கு தொடங்கப்படும். இந்த கணக்கில் ஊதியதாரர்கள் தங்களது சம்பளத்தில் 12% தொகையை செலுத்த வேண்டும். அதேபோல அவருக்கு சம்பளம் வழங்கும் நிறுவனமும் 12% தொகையை செலுத்த வேண்டும்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்திலேயே தொழிலாளர் பென்சன் திட்டமும் (EPS) இருக்கிறது. ஊதியதாரர்கள் இதை தேர்வு செய்தால் அவர்களின் சம்பளத்தில் 8.33% தொகை பென்சன் கணக்கிற்கு போகும். ஆண்டுக்கு அதிகபட்சமாக 15000 ரூபாய் வரை இதில் செலுத்தலாம்.

தற்போது தொழிலாளர் பென்சன் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சமாக 1000 ரூபாய் பென்சன் வழங்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்ச பென்சன் தொகையை உயர்த்த வேண்டும் என ஏற்கெனவே நெடுநாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குறைந்தபட்ச பென்சன் தொகையை உயர்த்துவதற்காக, ஆண்டு பங்களிப்பு வரம்பான 15000 ரூபாயை உயர்த்துவதற்கும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் இதுகுறித்து அரசு முடிவு எடுக்காமல் தாமதித்து வந்தது.

நாடாளுமன்றத்தில் கேள்வி

இந்நிலையில், தொழிலாளர் பென்சன் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கு நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளதா எனவும், குறைந்தபட்ச பென்சன் தொகையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா எனவும் நாடாளுமன்றத்தில் சிந்தா அனுராதா எம்.பி கேள்வி எழுப்பினார்.

இதற்கு அரசு அளித்துள்ள பதிலில், “தொழிலாளர் பென்சன் திட்டத்தின் கீழ் 2014ஆம் ஆண்டில் முதல்முறையாக குறைந்தபட்ச பென்சன் தொகையாக 1000 ரூபாய் வழங்கப்பட்டது. இதற்காக பட்ஜெட்டில் வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை விட கூடுதல் நிதி வழங்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச பென்சன் தொகையை உயர்த்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு அரசு பதில் அளிக்கவில்லை.

மேலும் படிக்க

ஆன்லைன் கடன் மோசடி: தீவிர நடவடிக்கையில் மத்திய அரசு!

அரசுப் பணியாளர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு: மார்ச் மாதம் எதிர்பார்ப்பு!

English Summary: EPFO: When is the minimum pension hike? What is the central government's response?
Published on: 19 December 2022, 10:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now