மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 August, 2020 6:33 PM IST
Credit: Financial express

கொரோனா நெருக்கடியிலும், ஊரடங்கு காலத்தில் வேலையிழந்தோருக்கு ESIC திட்ட பயனாளிகளுக்கு, அவர்கள் பெற்ற ஊதியத்தில் 50 சதவீத தொகையை 3 மாதங்களுக்கு வழங்குவதற்கு வகைசெய்யும் வகையில் மத்திய அரசு விதிமுறைகளை தளர்த்தியுள்ளது.

இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் பயன் பெறும் தொழிலாளர்கள், வேலையில்லாமல் இருக்கும்போது, அவர்களுக்கு அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா (Atal bimit vyakti kalyan yojana) திட்டத்தின்கீழ் நிவாரணத் தொகை அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை, 2021 ஜூன் 30-ம் தேதி வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதென இஎஸ்ஐ நிறுவனம் தீர்மானித்துள்ளது

தளர்த்தப்பட்ட நிபந்தனைகளின்படி, அதிகரிக்கப்பட்டுள்ள நிவாரணத்தொகை 24.03.2020-லிருந்து 31.12.2020 வரையிலான காலத்திற்கு வழங்கப்படும். அதற்கு பிறகு, அதாவது 01.01.2021 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு தளர்த்தப்படாத முந்தைய நிபந்தனைகளுடன் இந்தத் திட்டம் தொடரப்படும். 31.12.2020-க்கு பிறகு தளர்த்தப்பட்ட நிபந்தனைகள் குறித்து மறு ஆய்வு செய்யப்படும்.

தளர்த்தப்பட விதிமுறைகள்

  • நிவாரணம் கோரும் காலத்தில் அவர்கள் வேலையிழந்தவராக இருக்க வேண்டும்.

  • ஊழியர்களின் தினசரி ஊதியத்தில் 25 சதவீத தொகையை ESI பங்களிப்பிலிருந்து பெற முடியும். இது தற்போது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 90 நாட்களுக்கான பங்களிப்பை பெற முடியும்.

  • காப்பீடு கோரும் வகையிலான பணியில் அவர்கள் 2 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது. இந்தகால கட்டத்தில் அவர்களது பங்களிப்பு குறைந்தபட்சம் 78 நாட்களுக்கு செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

  • இதில் அக்டோபர் 1, 2019 முதல் மார்ச் 31, 2020 வரையான காலத்தில் உறுப்பினர்பங்களிப்பு செலுத்தப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.

  • காப்பீடு செய்யப்பட்ட நபர் கடைசி ESIC கிளை அலுவலகத்தில் நேரடியாக கோரிக்கையை சமர்ப்பிக்லாம், இதன் மூலம் அவர்களின் வங்கி கணக்கில் பணம் நேரடியாக செலுத்தப்படும்.


மேலும் படிக்க...

கிசான் கிரெடிட் கார்டு மூலம் ரூ.1,02,065 கோடி சலுகை கடன்- மத்திய அரசு!!

கொரோனா நெருக்கடியிலும் காரீஃப் விதைப்பு அதிகரிப்பு!!



English Summary: ESIC members who lost their jobs on Covid can claim 50 percent of average wage
Published on: 22 August 2020, 06:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now