News

Saturday, 13 May 2023 09:06 AM , by: R. Balakrishnan

Aadhar Card Ration card linking

ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என பல மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதற்காக பல மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் ஆதார் எண்ணுடன் ரேசன் கார்டை இணைப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ரேசன் கார்டு (Ration card)

இந்திய குடிமகனின் மிக முக்கிய அடையாள அட்டையாக ஆதார் கார்டு இருந்து வருகிறது. நாட்டில் நடைபெறும் பல மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு, அனைவரும் கட்டாயமாக ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேசன் கார்டு மற்றும் வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும் என அரசு அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது. இது மட்டுமின்றி, ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, பல மாதங்களாகவே கால அவகாசம் வழங்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், தற்போது வரைக்கும் பல ரேசன் கார்டுகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமலேயே இருக்கிறது. இந்த நிலையில் ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காத பொதுமக்களின் ரேசன் கார்டுகளுக்கு, ரேசன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்றும், ரேசன் கார்டு ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது

கால அவகாசம் நீட்டிப்பு

தற்போது ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வருகின்ற ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி பொதுமக்கள் தங்களின் ரேசன் கார்டுகளை ஆதார் கார்டு உடன் இணைத்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க

அரசுப் பணியாளர்கள் உடனே இதைச் செய்ய வேண்டும்: பென்சன் திட்டத்தில் கட்டுப்பாடு!

வீட்டில் இருந்து கொண்டே புதிய ரேசன் கார்டை வாங்கலாம்: எப்படித் தெரியுமா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)