மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 April, 2021 5:12 PM IST

நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை, கரும்பு நடவுக்கு மானியம் வழங்குவதை வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இடைக்கணு பூச்சியைக் கட்டுபடுத்த 50 சதவீத மானியத்தில் இனக்கவர்ச்சி பொறியும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம்

இதுதொடர்பாக, சர்க்கரை ஆலை முதுநிலை துணைத் தலைவர் ராமசுப்ரமணியம் கூறுகையில், கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலை ஊழியர்கள் என பலதரப்பட்டோர் கொரோனா ஊரடங்கால் மிகவும் பாதித்துள்ளனர்.

அவர்களின் சிரமத்திற்கு ஆறுதலாக கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை ஏப்ரல் மாதம் வரை செயல்படுத்தினோம். தொடர் மழை, பிறகு கடுமையான வெயிலால் கரும்பு நடவு செய்ய முடியாததால் கால அவகாசத்தை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

  • கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு 10,622 ரூபாய் வழங்கப்படும்.

  • வாழை, கொய்யா, செங்கல் சூளை ஆகியவற்றைத் தவிர்த்து கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு 20,622 ரூபாய் வழங்கப்படும்.

  • சவுக்கு பயிருக்கு பிறகு கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு 17,622 ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவித்திருந்தோம்.

பூச்சியை கட்டுப்படுத்த மருந்து

தற்போது, இந்த மானியம் வழங்கும் கால அவகாசத்தை ஜூன் மாதம் வரை நீட்டித்துள்ளோம். கூடுதலாக குருத்து பூச்சியை கட்டுப்படுத்தும் 2,500 ரூபாய் மதிப்புள்ள கோரோஜன் மருந்தும் இடைக்கணு பூச்சியைக் கட்டுபடுத்த 50 சதவீத மானியத்தில் இனக்கவர்ச்சி பொறியும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

ஊட்டியில் கேரட் விலை குறைந்தது! கவலையில் விவசாயிகள்!

உரங்களின் விலை உயர்வு நிறுத்தி வைப்பு! பழைய விலைக்கே வாங்கி கொள்ளலாம்!

உரங்கள் விலை உயர்வால் விவசாயிகள் வேதனை! விலைவுயர்வைக் குறைக்க கோரிக்கை!

English Summary: Extension of sugarcane planting subsidy scheme! - Delivered until June!!
Published on: 15 April 2021, 05:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now