மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 January, 2022 2:36 PM IST

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

ஒத்துழைக்க மறுப்பு (Refusal to cooperate)

இந்தியாவில் தற்போது 3-வது அலை தீவிரமாகப் பரவிவருகிறது. எனவே இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு மற்றும் பல்வேறுக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், மக்களிடையே ஒருமித்த ஒத்துழைப்பு இல்லை.

உணராதவர்கள் சிலர், அரசின் கட்டுப்பாடுகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, தங்கள் போக்கில் இருக்கிறார்கள்.

அபராதம் அதிகரிப்பு (Increase in fines)

இதனால் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவதுடன், அபராதத்தையும் அதிகரிப்பது நல்ல பலன் கொடுக்கும் என அதிகாரிகள் நினைக்கின்றனர்.
இதற்காக பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னையில் பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. போலீசார் அதிரடி சோதனை நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர்.

ரூ.500

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாமல் செல்வதைத் தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு அபராதத் தொகையினை ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. முக கவசம் அணிபவர்கள் வாய் மற்றும் மூக்கை நன்கு மூடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார். இதையடுத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

முகக்கவசம் அவசியம்

கொரோனாவை தடுக்க பொது மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வெளியே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.சென்னையில் ஏற்கனவே ரயில் நிலையங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

English Summary: Failure to wear it will result in a fine of Rs.500 - Tamil Nadu Government Action!
Published on: 13 January 2022, 02:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now